ஐஎஸ் தீவிரவாதிகளிடம் சிக்கியுள்ள 39 இந்தியர்களும் பத்திரம்- மத்திய அரசு
டெல்லி: ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் கடந்த ஆண்டு கடத்தப்பட்ட 39 இந்தியர்களும் பத்திரமாக இருப்பதாக மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.
39 இந்தியர்களும் மொசூல் நகரில் வைத்து தீவிரவாதிகளால் பிணை கைதிகளாக பிடிக்கப்பட்டனர். இவர்களின் நிலை குறித்து பல்வேறு நபர்கள் மூலம் விசாரித்ததில் அனைவரும் நலமாக இருப்பதாகவும், விரைவில் இவர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் லோக்சபாவில் அளித்த பதிலில், தொடர்ந்து இவர்களது நிலையை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. ஈராக் அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளோம். இவர்களின் இருப்பிடம், பாதுகாப்பு குறித்த தகவல்களை தொடர்ந்து அறிய முயன்ற வருகிறோம்.
எங்களுக்குக் கிடைத்த மூன்றாவது தரப்பு தகவல்களின்படி அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களைக மீட்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்றார்.
இன்னொரு கேள்விக்கு பதிலளித்த அவர், பாக்தாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்திடமிருந்து கிடைத்த தகவலின்படி அனைவரும் மொசூல் நகரில் வைக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
குர்திஸ்தான் தன்னாட்சிப் பகுதியில் மூத்த இந்திய அதிகாரிகள் குழு முகாமிட்டு அரசுத் தரப்புடனும், தீவிரவாதிகள் தரப்புடனும் பேசி இந்தியர்களை மீட்க முயன்று வருகிறது என்றார் அவர்.
கடந்த ஆண்டு ஜூன் 11ம் தேதி மொசூல் நகரில் வைத்து 40 இந்தியர்களை தீவிரவாதிகள் பிடித்துச் சென்றனர். பின்னர் ஹர்ஜீத் மஷி என்பவர் மட்டும் தப்பி வந்தார். அவர், மற்ற 39 பேரையும் தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று விட்டதாக கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications