உயர் அதிகாரிகளை விசாரிக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: இணைச் செயலர், அதற்கு மேலான பதவியிலுள்ள அதிகாரிகளை விசாரிக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என்று என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாஐகவின் சுப்ரமணியசாமி மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில் அரசு உயரதிகாரிகளிடம் விசாரணை நடத்த மத்திய அரசின் அனுமதி தேவையா, இல்லையா என்பது குறித்த வாதம் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இணைச்செயலர் அதற்கு மேலான அதிகாரிகளை விசாரிக்க அரசு அனுமதி தேவையில்லை என்றும், மத்திய அரசின் அனுமதியின்றி அதிகாரிகளை சிபிஐ விசாரிக்கலாம் என்றும், அனைத்து அதிகாரிகளும் ஒரேபோலத்தான் நடத்தப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் முறைகேடுகளில் சிக்கியுள்ள அதிகாரிகளை மத்திய அரசு நினைத்தாலும் காப்பாற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications