அரசு உதவித் தொகைக்கு ஆசைப்பட்டு... கணவர் இருக்கும்போதே விதவை நாடகமாடிய கவுன்சிலர்!
ஹைதராபாத்: ஆந்திராவில் அரசு உதவித் தொகை பெறுபவதற்காக கணவர் உயிருடன் இருக்கும் போதே விதவை நாடகமாடிய கவுன்சிலரை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர். இப்பெண் கவுன்சிலர் கடந்த பத்தாண்டுகளாக விதவைகளுக்கான பென்சன் தொகையைப் பெற்று வந்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இதில் 35-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் ஒய்.எச்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த புத்தூர் நாகராஜம்மா (36). இவர் அரசு உதவித்தொகை பெறுவதற்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் குழுவின் தலைவியாகவும் பதவியில் இருந்துள்ளார்.
நாகராஜம்மாவின் கணவர் உயிருடன் உள்ளபோதும், அரசு உதவித் தொகையை பெரும் நோக்கில் அரசுக்குத் தயார் செய்த பட்டியலில் தனது பெயரையும் சேர்த்து விதவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் தகுதியானவர்களின் பெயர் பட்டியலை நகராட்சி அதிகாரிகளிடம் கையெழுத்து பெற்று, மேலதிகாரிகளுக்கு அனுப்பிய நாகராஜம்மா, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக மாதம் தோறும் ரூ. 200 ஐ அரசு உதவித் தொகையாகப் பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவி ஏற்றதும், விதவை உதவித்தொகையை ரூ.1,000 ஆக உயர்த்தி உத்தரவிட்டார்.
இதனால், உதவித்தொகை பெறுவதற்கு தகுதியானவர்களின் பட்டியலை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்து வேறு பட்டியல் அனுப்புமாறு சம்பந்தப் பட்டவர்களுக்கு அரசு அறிவுறுத்தியது. எனவே, தொடர்ந்து உதவித் தொகை பெறும் ஆசையில் மீண்டும் தனது பெயரை பட்டியலில் சேர்த்து நகராட்சி அதிகாரிகளின் கையொப்பம் பெற்று அரசுக்கு அனுப்பினார்.
ஆனால், நாகராஜம்மா கணவர் உயிருடன் இருக்கும்போதே தன்னை விதவை என்று தவறான தகவலை கொடுத்து அரசு உதவித்தொகை பெற்று வருவதாக, 35-வது வார்டு பொதுமக்கள் நகராட்சி தலைவர் ராதாரெட்டியிடம் புகார் தெரிவித்தனர்.
இப்புகாரின் பேரில் ராதாரெட்டி பட்டியலை ஆய்வு செய்தபோது, கடந்த பத்து ஆண்டுகளாக நாகராஜம்மா விதவை உதவித் தொகை பெற்று வந்தது அம்பலமானது. அதைத்தொடர்ந்து, கவுன்சிலர் நாகராஜம்மாவுக்கு விதவை உதவித்தொகை வழங்குவதை உடனடியாக நிறுத்தும்படி, அரசுக்கு நகராட்சி தலைவர் ராதாரெட்டி பரிந்துரை செய்துள்ளார்.
மேலும், கணவர் இருக்கும்போதே தன்னை விதவை என்று தவறான தகவலை கொடுத்து, அரசின் விதவை உதவித்தொகையை கடந்த 10 ஆண்டுகளாக பெற்று வந்த நாகராஜம்மா மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ராதாரெட்டி தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications