உடலில் காயங்கள்.. இருட்டு அறையில் அடைத்து போலீசார் சித்ரவதை.. பெண் கண்ணீர் வீடியோ.. என்ன நடந்தது?
விசாகப்பட்டினம்: தன் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தி இருட்டு அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக போலீசார் மீது ஆந்திர மாநில பெண் கண்ணீர் மல்க கூறியுள்ளார். இந்த கொடூர சம்பவத்தை பற்றி பார்ப்போம்.
ஆந்திர மாநிலம் லட்சுமி நகர் காலனியை சேர்ந்த பெண் எம் உமாமகேஸ்வரி.சித்தூர் மாவட்ட சிறை கண்காணிப்பாளர் வேணுகோபால் ரெட்டி வீட்டில் அவர் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வேணுகோபால் ரெட்டி வீட்டில் இருந்த சிறிதளவு பணத்தை காணவில்லை.

காணாமல் போன பணம்
இதற்கிடையே வழக்கம்போல் வேலைக்கு சென்ற உமாமகேஸ்வரியிடம் வேணுகோபால் ரெட்டியும், அவரது மனைவியும் காணாமல் போன பணம் குறித்து கேட்டுள்ளனர். பணம் பற்றி எனக்கு தெரியாது என்று அந்த பெண் பதிலளித்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்த பணத்தை திருடி விட்டதாக உமாமகேஸ்வரி மீது வேணுகோபால் ரெட்டி சித்தூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.

இருட்டு அறையில் அடைத்து சித்ரவதை
இதனை தொடர்ந்து உமாமகேஸ்வரியை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில்தான் சித்தூர் டவுன் போலீசார் தன்னை போலீஸ் நிலையத்தின் இருட்டு அறையில் வைத்து கொடுமைப்படுத்தியாக உமாமகேஸ்வரி கூறியுள்ளார். ''போலீசார் என்னை துன்புறுத்தினார்கள். என் மீது தகாத வார்த்தைகளால் பேசினார்கள். காவல்நிலையத்தில் உள்ள இருட்டு அறையில் என்னை சித்திரவதை செய்தார்கள். இரவு வெகுநேரம் வரை போலீசார் என்னை வீட்டிற்கு திரும்ப அனுமதிக்கவில்லை. புகாரை ஏற்று பணத்தை திருப்பி தருமாறு போலீசார் வற்புறுத்தினார்கள். எனது கணவரையும் துன்புறுத்தினார்கள்'' என்று அவர் கூறியுள்ளார்.

உடலில் காயங்கள்
உமாமகேஸ்வரி கண்ணீர் மல்க பேசும் வீடியோவை தெலுங்கு தேசம் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பெண்ணின் உடலில் காயங்கள் இருப்பது வீடியோவில் தெளிவாக தெரிகிறது. அதே வேளையில் சித்தூர் டவுன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சீனிவாச ராவ், பெண் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்துள்ளார்.

போலீசார் மறுப்பு
குற்றச்சாட்டை மறுத்து சித்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பெயரில் ஒரு செய்திக்குறிப்பை காவல்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அதில் ''தனது வீட்டில், 2 லட்சம் ரூபாய் திருட்டில் ஈடுபட்டதாக,
உமாமகேஸ்வரி மீது வேணுகோபால் ரெட்டி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீஸ் விசாரணை துவங்கியது. உமாமகேஸ்வரிக்கு முறையான நோட்டீஸ் அனுப்பி, காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டார். அவர் பணத்தை திருடியதை ஒப்புக் கொண்டார்' என்று கூறியுள்ளனர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்?












Click it and Unblock the Notifications