எமெர்ஜென்சி மூலம் மக்களின் வாழும் உரிமையை பறித்த காங். சகிப்பின்மை பற்றி பேச கூடாது: ஜேட்லி ஆவேசம்
டெல்லி: எமர்ஜென்சி நிலையை கொண்டுவந்த காங்கிரசுக்கு, சகிப்புத்தன்மை பற்றி பேச அருகதையில்லை என்று ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் இன்று நடைபெற்ற அரசியலமைப்பு தொடர்பான விவாதத்தின் போது நிதி அமைச்சர் ஜேட்லி கூறியதாவது: அம்பேத்கரை அரசியலமைப்பை சட்டத்தை உருவாக்கிய சிற்பியாக மட்டுமின்றி, சமூக சீர்திருத்தவாதியாகவும் பார்க்க வேண்டும்.

1975ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரநிலையை ஒப்பிட்டால், இன்று நாம் எவ்வளவோ பாதுகாப்பான ஒரு நிலையில் உள்ளோம். எமெர்ஜென்சியின்போது, மக்கள் உயிர்வாழும் உரிமையை கூட இழந்தனர். ஆர்டிகிள் 21ல் மக்களுக்கு வாழும் உரிமை வழங்கப்பட்டு்ள்ளது. இதை, சஸ்பெண்ட் செய்தது இந்திராகாந்தி அரசு.
எனவே வாழும் உரிமையை பறித்தது காங்கிரஸ் அரசு. ஆனால் இன்றோ, யாரோ ஒருவர் டிவியில் தனது கருத்தை கூறினால் அது சகிப்பற்றத்தன்மை என்று கூறப்பட்டுவிடுகிறது.
மொராஜி தேசாய் மற்றும் அவரது அரசுதான், ஆர்டிகிள் 21ல் திருத்தம் கொண்டுவந்து அதை சஸ்பெண்ட் செய்ய முடியாதபடி மாற்றியமைத்தது. காங்கிரஸ் ஆட்சியில்தான் ஆர்டிகிள் 356 (மாநில அரசை கலைப்பது) பலமுறை தவறாக பயன்படுத்தப்பட்டது. இப்போதுதான், அந்த நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த 65 வருடங்களில் ஜனநாயகம் வலுப்படுத்தப்பட்டே வந்துள்ளது. இன்றைய அரசியமைப்பில் முக்கிய சவால் தீவிரவாதம். நாட்டில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிக்கு தண்டனை கொடுத்தால், அவனையும், தியாகியாக உருவகப்படுத்த ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு அருண் ஜேட்லி பேசினார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications