அருணாசல பிரதேச ஆளுநர் ராஜ்கோவா பதவி விலக மத்திய அரசு உத்தரவு?
டெல்லி: அருணாசல பிரதேச ஆளுநர் ராஜ்கோவாவை பதவி விலக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அருணாசலபிரதேச ஆளுநராக ஜோதிபிரகாஷ் ராஜ்கோவா, கடந்த ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றார். அங்கு நபம் துகி தலைமையிலான காங்கிரஸ் அரசை கலைத்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் கண்டனத்துக்கு அவர் ஆளானார்.

தற்போது ராஜ்கோவா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். அதனால், புதிய முதல்வர் பீமா காண்டு பதவி ஏற்ற நிகழ்ச்சியில் கூட அவரால் கலந்து கொள்ள முடியவில்லை.
இந்நிலையில் உடல் நிலையை கருத்தில் கொண்டு ராஜ்கோவாவை பதவி விலகுமாறு மத்திய அரசு தரப்பில் வாய்மொழியாக கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் யாரிடம் இருந்தும் அதிகாரபூர்வ உத்தரவு வரவில்லை என்று ஆளுநரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆளுநர் ராஜ்கோவா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டதாகவும், அப்போது பதவி விலகுமாறு ராஜ்நாத்சிங் கோரவில்லை என்றும் அவர் கூறினார்.
அதேநேரத்தில் ராஜ்கோவா பதவி விலக மறுத்தால் அவரை பதவி நீக்கம் செய்யுமாறு ஜனாதிபதியை மத்திய அரசு கேட்டுக்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது,
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications