பீகார் 2–ம் கட்ட சட்டசபை தேர்தல்: 32 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு!!
பாட்னா: பீகாரில் 2வது கட்ட சட்டசபை தேர்தல் நாளை 32 தொகுதிகளில் நடைபெற உள்ளது. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் இவ்வாக்குப் பதிவு நடைபெறுவதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பீகாரில் 243 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 12-ந் தேதியன்று முதல் கட்டமாக 49 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 57% வாக்குகள் பதிவாகின.

இதையடுத்து 2வது கட்ட தேர்தல் நடைபெறும் 32 தொகுதிகளிலும் நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.
இந்த 32 தொகுதிகளிலும் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த 32 தொகுதிகளுமே மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள இடங்களாகும்.
ஆகையால் 11 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 3 மணியுடன் நிறைவடைந்துவிடும். மேலும் 12 தொகுதிகளில் மாலை 4 மணியுடன் வாக்குப் பதிவு நிறுத்தப்படும். எஞ்சிய தொகுதிகளில் மாலை 5 மணிவரை வாக்குப் பதிவு நடைபெறும்.
நாளைய 2வது கட்ட தேர்தலில் மொத்தம் 456 வாக்காளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 32 பேர் பெண்கள். மொத்தம் 86,13, 870 வாக்காளர்கள் நாளை வாக்களிக்க உள்ளனர். நாளைய தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் முன்னாள் முதல்வர் மாஞ்சி போட்டியிடும் இமாம்கஞ்ச் தொகுதியும் ஒன்று. இத்தொகுதியில் 5 முறை எம்.எல்.ஏ.வாக வென்ற ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சபாநாயகர் உதய் நாராயண் செளத்ரியுடன் மாஞ்சி மோதுகிறார்.
நாளைய வாக்குப் பதிவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகளில் துணை ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதன் பின்னர் வரும் 3-வது கட்டமாக 28-ந்தேதி 6 மாவட்டங்களில் உள்ள 50 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. நவம்பர் 1-ந்தேதி 4-ம் கட்டமாக 55 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.
இறுதியாக 5-ம் கட்டமாக தேர்தல் நவம்பர் 5-ந்தேதி 57 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும். அனைத்து வாக்குகளும் 8-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications