மும்பை அடுக்குமாடி கட்டிட விபத்து...3 மாத குழந்தை உள்பட 8 பேர் பலி!
மும்பையில் 4 அடுக்குமாடி கட்டிடம் புனரமைப்பு பணியின் போது இடிந்த விழுந்ததில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
மும்பை : மும்பையின் புறநகர்ப் பகுதியில் 4 அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 மாத குழந்தை உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர், 30க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கக் கூடும் என்று தெரிகிறது.
மும்பையின் கிழக்கு புறநகர்ப் பகுதியான கட்கோபாரின் தாமோதர் பூங்கா பகுதியில் 4 அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தின் அடித் தளத்தில் நர்சிங் ஹோம் உள்ளது அதிர்ஷ்டவசமாக இங்கு நோயாளிகள் யாரும் இல்லை. மற்ற 4 தளங்களிலும் ஒவ்வொரு தளத்திலும் சுமார் 3 குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர்.

இந்தக் கட்டிடத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், அந்தப் பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்ததாக நகராட்சி அதிகாரிகள் கூறியுள்ளனர். இன்று காலை நிகழ்ந்த இந்த இடிபாடுகளில் 30க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது. இந்தக் கட்டிடம் 30 ஆண்டுகள் பழமையானது என்று சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கி 3 மாத குழந்தை உள்பட 8 பேர் இது வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடிபாடுகளில் மேலும் 30 பேர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுவதால் இந்த கட்டிட விபத்தில் மேலும் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மீட்புக் குழுவினர் கூறுகின்றனர்.
மராட்டிய மாநிலத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மராட்டிய மாநிலத்தில் மழை காலங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து உயிரிழப்பு நேரிடுவது வழக்கமாகி வருகின்றன. எனவே கட்டிடங்களின் தரத்தை ஆராய்ந்து சரியான நடவடிக்கை எடுத்து உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கவேண்டுமென சிலர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். அரசு தரப்பில் ஆய்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications