2014 தேர்தல் பிரச்சார தொனியிலேயே பேசும் மோடி.. நாட்டை காங்கிரஸ் சீரழித்துவிட்டதாக குஜராத்தில் பேச்சு
காந்திநகர்: காங்கிரஸ் கட்சியின் சாதிவெறி, மதவெறி, குடும்ப அரசியல் மாடலால் குஜராத் மட்டுமின்றி நாடே அழிந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசி இருக்கிறார்.
வடக்கு குஜராத் பகுதியில் அமைந்து இருக்கும் மெஹ்சானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் காங்கிரஸ் மாடல் என்பது, குடும்ப அரசியல், ஊழல், சாதி வெறி, மத வெறி, வாங்கி வங்கி அரசியல் ஆகியவை தான் என்றார்.

காங்கிரஸ்தான் காரணம்
அவர் தனது உரையில், "தங்கள் வாக்கு வங்கி அரசியலை பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றி மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவதே காங்கிரஸ் கட்சியின் வேலை. காங்கிரஸ் கட்சியின் இந்த மாடல் குஜராத்தை மட்டுமின்றி இந்தியா முழுவதையும் அழித்துவிட்டது.

தொடர் பிரச்சாரம்
அதன் காரணமாகவே நாங்கள் கடினமாக உழைத்து நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றினோம்." என்றார். குஜராத்தில் சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி அடுத்தடுத்து தாஹோத், வதோதரா, பாவ்நகர் பகுதிகளிலும் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளார்.

குஜராத் அரசு
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் கடந்த 24 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் இருந்து வருகிறது. கடந்த 2017 சட்டசபைத் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்த குஜராத் பாஜக அரசின் 5 ஆண்டு பதவிக்காலம் நிறைவடைய இருக்கிறது.

சட்டசபைத் தேர்தல்
இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தன. இந்த நிலையில் குஜராத் தேர்தலுக்காக வாக்குப்பதிவு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.

பாஜகவின் டார்கெட்
டிசம்பர் 8 ஆம் தேதி இமாச்சல பிரதேச மாநிலத்துடன் சேர்த்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குஜராத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கமாக இருக்கிறது.

முழு பலம்
இதற்காக தனது மொத்த பலத்தையும் குஜராத் மாநிலத்தில் இறக்கி உள்ளது அக்கட்சி. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அம்மாநிலத்தில் தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் அல்லாமல் மத்திய கேபினட் அமைச்சர்கள், பிற மாநில முதலமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் என பலரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சாதனையை நெருங்கும் பாஜக
இதனால் பாஜக தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு செல்லும் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. ஆம் ஆத்மி கட்சி இதில் நெருக்கடி கொடுக்கும் என்று கணிப்புகள் வெளியானாலும், பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்றே பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதிலும் அடுத்த தேர்தலிலும் பாஜக வெல்லும் பட்சத்தில், மேற்கு வங்கத்தில் 33 ஆண்டுகள் ஆட்சி செய்த இடது முன்னணியின் சாதனையை பாஜக முறியடிக்கும்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications