திரிபுராவில் திப்ரலாந்து தனி மாநில கோரிக்கையை தூண்டுவதே பாஜகதான்... மார்க்சிஸ்ட் கட்சி பாய்ச்சல்
திரிபுராவில் திப்ரலாந்து தனி மாநில கோரிக்கையை அரசியல் ஆதாயத்துக்காக பாஜக தூண்டுகிறது என சாடியுள்ளது சிபிஎம்.
அகர்தலா: திரிபுராவில் பூர்வகுடி மக்கள் வாழும் பகுதிகளை இணைத்து திப்ரலாந்து தனி மாநிலம் உருவாக்கக் கோரி நடைபெறும் போராட்டத்தை பாஜக தூண்டிவிடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாடியுள்ளது.
திரிபுராவின் பூர்வகுடி மக்கள், மேற்கு வங்கத்தில் இருந்து குடியேறியவர்களை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். பூர்வகுடி மக்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து திப்ரலாந்து என்கிற தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை.

கூர்க்காலாந்து
இதனால் பூர்வகுடி மக்கள் வாழும் பகுதிகளை ஒருங்கிணைத்து தன்னாட்சி நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டது. தற்போது மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் பகுதிகளை ஒருங்கிணைத்து கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரும் போராட்டம் வெடித்துள்ளது.
|
திப்ரலாந்து
இது திரிபுராவில் மீண்டும் கிளர்ச்சியை உருவாக்கி உள்ளது. தற்போது திரிபுராவில் பூர்வகுடி மக்கள் திப்ரலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தலைநகர் அகர்தலாவை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதையை போராட்டக் குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.

மணிப்பூர் சதி
இதனால் திரிபுராவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திரிபுரா மாநில செயலாளர் பிஜன் தார், மணிப்பூர் சட்டசபை தேர்தலுக்கு முன்னர் நாகா இனமக்கள் குழுக்களை தூண்டிவிட்டு இதேபோல் காலவரையற்ற போராட்டத்தை பாஜக தூண்டிவிட்டது. இதனால் மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த உடனேயே காலவரையற்ற போராட்டம் கைவிடப்பட்டது.

பாஜக கனவு
தற்போது திரிபுராவும் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது. இங்கும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக திடீரென திப்ரலாந்து போராட்டத்தை பாஜக தூண்டிவிடுகிறது. மணிப்பூரில் பாஜகவின் சதித் திட்டம் வென்றிருக்கலாம். ஆனால் திரிபுராவில் இது நடைபெறாது என்றார்.
-
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ












Click it and Unblock the Notifications