இந்தியாவிடம் சரணடைய முன்வந்தார் தாவூத் இப்ராகிம்.. வக்கீல் புதுத் தகவல்
மும்பை: இந்திய அரசிடம் சரணடைய விரும்பி சில ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்தார் தாவூத் இப்ராகிம். ஆனால் அவரது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவில்லை. இதனால்தான் அவர் சரணடைவதிலிருந்து பின்வாங்கி விட்டார். அவர் கேட்ட சில கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வந்திருந்தால் தாவூத்தும் இன்னேரம் நமது பிடியில் வந்திருப்பார் என்று தாவூத்தின் வழக்கறிஞரான ஷியாம் கேஸ்வானி கூறியுள்ளார்.
மேலும் சோட்டா ராஜனின் அத்தனை வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைத்திருக்கும் முடிவு தன்னை ஆச்சரியப்படுத்தியுள்ளதாகவும் கேஸ்வானி கூறியுள்ளார்.

இதுகுறித்து இந்தியா டுடே இதழுக்கு கேஸ்வானி அளித்துள்ள பேட்டி...
சோட்டா ராஜன் தன்னை மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கக் கூடாது என்று எப்படிக் கூறினாரோ அதே போலத்தான் தாவூத் இப்ராகிமும் கோரிக்கை விடுத்தார். தனது உயிருக்கு அங்கு ஆபத்து இருப்பதாக கருதினார் தாவூத்.
மேலும் சோட்டா ராஜன் தற்போது என்னவெல்லாம் கோரிக்கை வைத்தாரோ அதே போன்ற கோரிக்கைகளைத்தான் அப்போது தாவூத்தும் வைத்தார். ஆனால் சோட்டா ராஜன் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்ததைப் போல தாவூத் கோரிக்கைகளை ஏற்க முன்வரவில்லை என்றார் கேஸ்வானி.
தாவூத் இப்ராகிம் சரணடைய விரும்பியதாக முன்னாள் பாஜக எம்.பி. ராம்ஜேத்மலானியும் சமீபத்தில் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். தனது உயிருக்கு இந்தியாவில் ஆபத்து இருப்பதாக தாவூத் தன்னிடம் கூறியதாகவும் ஜேத்மலானி தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு வைத்திருந்த, வைத்துள்ள மும்பை போலீஸ் அதிகாரிகளின் பெயர்ப் பட்டியலை சோட்டா ராஜன் சிபிஐ வசம் கொடுத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நடந்த விசாரணையின்போது இதை அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications