இந்தியாவிடம் சரணடைய முன்வந்தார் தாவூத் இப்ராகிம்.. வக்கீல் புதுத் தகவல்
மும்பை: இந்திய அரசிடம் சரணடைய விரும்பி சில ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்தார் தாவூத் இப்ராகிம். ஆனால் அவரது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவில்லை. இதனால்தான் அவர் சரணடைவதிலிருந்து பின்வாங்கி விட்டார். அவர் கேட்ட சில கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற முன்வந்திருந்தால் தாவூத்தும் இன்னேரம் நமது பிடியில் வந்திருப்பார் என்று தாவூத்தின் வழக்கறிஞரான ஷியாம் கேஸ்வானி கூறியுள்ளார்.
மேலும் சோட்டா ராஜனின் அத்தனை வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைத்திருக்கும் முடிவு தன்னை ஆச்சரியப்படுத்தியுள்ளதாகவும் கேஸ்வானி கூறியுள்ளார்.

இதுகுறித்து இந்தியா டுடே இதழுக்கு கேஸ்வானி அளித்துள்ள பேட்டி...
சோட்டா ராஜன் தன்னை மும்பை ஆர்தர் சாலை சிறையில் அடைக்கக் கூடாது என்று எப்படிக் கூறினாரோ அதே போலத்தான் தாவூத் இப்ராகிமும் கோரிக்கை விடுத்தார். தனது உயிருக்கு அங்கு ஆபத்து இருப்பதாக கருதினார் தாவூத்.
மேலும் சோட்டா ராஜன் தற்போது என்னவெல்லாம் கோரிக்கை வைத்தாரோ அதே போன்ற கோரிக்கைகளைத்தான் அப்போது தாவூத்தும் வைத்தார். ஆனால் சோட்டா ராஜன் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்ததைப் போல தாவூத் கோரிக்கைகளை ஏற்க முன்வரவில்லை என்றார் கேஸ்வானி.
தாவூத் இப்ராகிம் சரணடைய விரும்பியதாக முன்னாள் பாஜக எம்.பி. ராம்ஜேத்மலானியும் சமீபத்தில் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். தனது உயிருக்கு இந்தியாவில் ஆபத்து இருப்பதாக தாவூத் தன்னிடம் கூறியதாகவும் ஜேத்மலானி தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே தாவூத் இப்ராகிமுடன் தொடர்பு வைத்திருந்த, வைத்துள்ள மும்பை போலீஸ் அதிகாரிகளின் பெயர்ப் பட்டியலை சோட்டா ராஜன் சிபிஐ வசம் கொடுத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் நடந்த விசாரணையின்போது இதை அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications