ரூபாய் நோட்டு செல்லாது…மோடியின் வரலாற்று சிறப்பு மிக்க முடிவு.. புகழ்ந்து தள்ளிய முகேஷ் அம்பானி
ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் அறிவிப்பு வரலாற்று சிறப்பு மிக்க முடிவு என்று ரிலையன்ஸ் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.
மும்பை: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றாகும் என்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி மோடியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த 8ம் தேதி மோடி அறிவித்தார். மேலும், ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தாமல் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனையை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளில் வங்கிகளை ஈடுபடுத்துவதற்கான வேலைகளும் நடந்து வருகின்றன.

ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றன. மேலும், நாடாளுமன்றத்திலும் கேள்விகளை கேட்டு, இரு அவைகளையும் எதிர்க்கட்சி எம்பிக்கள் முடக்கி வருகின்றனர்.
இந்நிலையில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி, பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கையை வெகுவாக பாராட்டியுள்ளார். இன்று ஜியோ தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முகேஷ் அம்பானி, ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் அறிவிப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என்றும் இது ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தால் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு இந்தியாவை இட்டுச் செல்லும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்த பிரதமர் மோடியை பாராட்டுவதாக கூறியுள்ள முகேஷ் அம்பானி, கருப்புப் பணத்தை ஒழித்து, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் இந்தத் திட்டத்தால் சாதாரண மக்கள் பெரிய அளவில் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications