ரோஹித் மெமுலா பற்றி அமைச்சர் ஸ்மிருதி அனல் பறக்க தெரிவித்த தகவல் பொய்யா?
ஹைதராபாத்: ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா இறந்து மறுநாள் காலை 6.30 மணி வரை அவரது உடல் அருகே செல்ல மருத்துவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த தகவல் தவறு என்று செய்தி வெளியாகியுள்ளது.
ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்டதை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அரசியலாக்குகிறார் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் ராகுல் மெமுலாவின் உடலை அரசியல் ஆயுதமாக பார்க்கிறார் என்றார்.

டாக்டர்கள்
ரோஹித் வெமுலா தற்கொலை செய்து கொண்ட பிறகு மறுநாள் காலை 6.30 மணி வரை அவரது உடல் அருகே மருத்துவர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. அவரை காப்பாற்றவிடாமல் தடுத்துள்ளனர். வெமுலாவை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தியுள்ளனர் என்று ஸ்மிருதி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

ரோஹித்
ரோஹித் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் இருக்கும் அறையில் தூக்கில் பிணமாகத் தொங்கியது மாலை 6.30 மணி முதல் 7 மணி இடையே கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை
ரோஹித் தனது நண்பர் உமா மகேஷ்வரின் அறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தூக்கில் தொங்கியதை பார்த்த வாட்ச்மேன் உடனே வளாகத்தில் இருந்த டாக்டர் ராஜ்ஸ்ரீக்கு தகவல் அளித்தார்.

மரணம்
ஜனவரி 17ம் தேதி இரவு 7.20 மணிக்கு எனக்கு ரோஹித் பற்றி போன் வந்தது. உடனே நான் விடுதிக்கு சென்று அவரை பரிசோதனை செய்து அவர் இறந்துவிட்டதாக 10 நிமிடத்தில் தெரிவித்தேன். இது குறித்து துணை வேந்தருக்கும் உடனே தெரிவிக்கப்பட்டது. ரோஹித்தை காப்பாற்ற முடியுமா என்று அவர் என்னிடம் கேட்டார். இரவு 3 மணி வரை நான் அங்கு தான் இருந்தேன் என்று டாக்டர் ராஜ்ஸ்ரீ பல்கலைக்கழக சுகாதார பதிவேட்டில் எழுதி வைத்துள்ளார்.

7.30 மணி
ரோஹித் இறந்துவிட்டதாக இரவு 7.30 மணிக்கு ராஜ்ஸ்ரீ அறிவித்துள்ளார். ரோஹித்தை அவர் பரிசோதனை செய்தபோது அங்கு மாணவர்களும், போலீசாரும் இருந்துள்ளனர்.

பொய்யா?
ரோஹித் மெமுலாவை காப்பாற்ற முயற்சி நடக்கவில்லை என்றும், அவரின் உடல் அருகே செல்ல டாக்டர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் ஸ்மிருதி தெரிவித்த தகவலில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications