சீனாவின் குடைச்சலை கையாளுவது எப்படி? எதிர்கட்சிகளுக்கு மத்திய அரசு விளக்கம்
இந்திய - சீன எல்லையில் நீடிக்கும் பதற்றத்துக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது.
டெல்லி: இந்திய - சீன எல்லையில் நீடிக்கும் பதற்றத்துக்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு நேற்று அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. மத்திய அமைச்சர்கள் சுஷ்மா, ராஜ்நாத் சிங் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
சிக்கிம் மாநில எல்லையில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை சீன அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை தடுத்த இந்திய வீரர்களுடன் கைக்கலப்பில் ஈடுபட்டது.

இதனால் இந்திய சீன எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளும் தங்களின் படை வீரர்களை குவித்துள்ளன.
இந்நிலையில் இது குறித்து விவாதிக்க டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பாதுகாப்பு மற்றும் நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
இந்த கூட்டத்தில் பா.ஜ.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். நாடாளுமன்றக் தொடர் வரும் திங்கள்கிழமை தொடங்க உள்ள நிலையில் எதிர்கட்சிகளுக்கு எல்லை விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சீன விவகாரத்தில் அனைத்துக்கட்சிகளின் நிலைப்பாட்டை அறிய மத்திய அரசு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications