அமெரிக்காவின் அறிவுறுத்தலை ஏற்கும் இந்தியா.. ஈரானிடம் பெட்ரோல் வாங்குவதை தவிர்க்க முடிவு
அமெரிக்காவின் அறிவுறுத்தலை ஏற்று ஈரானில் இருந்து பெட்ரோல், டீசல் வாங்குவதை தடை செய்ய இந்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி: அமெரிக்காவின் அறிவுறுத்தலை ஏற்று ஈரானில் இருந்து பெட்ரோல், டீசல் வாங்குவதை தடை செய்ய இந்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. அணு ஆயுதம் வைத்து இருப்பதாக கூறி, ஈரான் மீது இரண்டாவது முறையாக அமெரிக்க பொருளாதார தடை விதித்துள்ளது. இதனால் அமெரிக்காவின் நட்பு நாடுகள், ஈரானில் இருந்து எந்த பொருளையும் இறக்குமதி செய்யாது.

இந்த நிலையில் ஈரானில் இருந்து அதிக அளவில் பெட்ரோல், டீசல் வாங்கும் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது. இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியா ஈரானில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா கோரிக்கை வைத்தது.
இதையடுத்து தற்போது அமெரிக்காவின் அறிவுறுத்தலை ஏற்று ஈரானில் இருந்து பெட்ரோல், டீசல் வாங்குவதை தடை செய்ய இந்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மட்டும் இப்போது அறிக்கை சென்றுள்ளது.
இதுபற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் தற்போது, ஈரானில் இருந்து படிப்படியாக பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதை குறைக்க இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளது.
விரைவில் மொத்தமாக பெட்ரோலிய பொருட்கள் வாங்குவதை நிறுத்தும் என்று கூறப்படுகிறது. அதற்கு பதிலாக சவுதி, குவைத் நாடுகளில் இருந்து பெட்ரோல் எடுக்க முடிவெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications