சென்னை இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் 4 அல்-உம்மா தீவிரவாதிகள் பெங்களூரில் கைது
பெங்களூர்: சென்னையில் இந்து முன்னணி தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் நான்குபேர் பெங்களூரில் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு மற்றும் பெங்களூர் போலீசார் இணைந்து நடத்திய வேட்டையில் இவர்கள் சிக்கினர்.
சென்னை அம்பத்தூர் இன்டஸ்டிரியல் எஸ்டேட்டில், திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஷ்குமார், கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். மர்ம கும்பல் அவரை வெட்டிக்கொன்று விட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த படுகொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய, 10 தனிப்படைகள் களத்தில் இறக்கப்பட்டன. போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் கருணாசாகர், இணை கமிஷனர் சண்முகவேலு, துணை கமிஷனர் மயில்வாகனன் ஆகியோரின் நேரடி தலைமையின் கீழ் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் துப்பு துலக்கப்பட்டு, ஏற்கனவே குத்புதீன், காஜாமொய்தீன், நசீர் மற்றும் 17 வயது மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில், நேற்று மேலும் நான்குபேர் பெங்களூர் விவேக்நகரில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பெயர்கள் அப்துல் சமீம், சமியுல்லா, சாதிக், நவாஸ் என்று தெரியவந்தது. இதில் சமீம் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அங்கு இந்து முன்னணி பிரமுகர் வெட்டப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்.

தற்போது கைதாகி இருக்கும் சமீம், மற்றும் நவாஸ் ஆகியோர்தான், சுரேஷ்குமாரை நேரடியாக அரிவாளால் வெட்டி கொன்றவர்கள் என்று தெரிய வந்துள்ளதாகவும், பொதுக்கூட்டம் ஒன்றில் முஸ்லீம்களுக்கு எதிராக சுரேஷ்குமார் பேசியதால், அவரை திட்டமிட்டு வெட்டி கொலை செய்து வீசியதாகவும், கொலையாளிகள் தெரிவித்துள்ளதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமியுல்லா பெங்களூர் விவேக்நகரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இது தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். கொலையாளிகளுக்கு இவர்தான் அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழக காவல்துறையும், பெங்களூர் குற்றப்பிரிவு காவல்துறையும் இணைந்து இவர்களை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பெங்களூர் குற்றப்பிரிவு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "அல்-உம்மா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த சமியுல்லா என்பவர் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக தமிழக போலீசார் அளித்த தகவலின்பேரில் அம்மாநில போலீசாருடன் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு சமியுல்லாவை சுற்றி வளைத்தோம். அப்போது அல்-உம்மா தீவிரவாதிகள் மேலும் மூவரான அப்துல் சமீம், சாதிக், நவாஸ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடந்த 2-3 மாதங்களாக பெங்களூரில் பதுங்கியிருந்தனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளை தமிழகம் அழைத்துச்செல்கின்றனர் போலீசார்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications