கீதா இந்தியா வந்தாச்சு.. ரம்ஜான் பாகிஸ்தான் போகவேண்டியதுதான் பாக்கி!
டெல்லி: இந்தியாவை சேர்ந்த கீதா பாகிஸ்தானில் இருந்து பத்திரமாக திரும்பியுள்ளதை போல, பாகிஸ்தானை சேர்ந்த 15 வயது சிறுவன் முகமது ரம்ஜானை மீண்டும் பாகிஸ்தான் அனுப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
பாகிஸ்தானின், கராச்சியை சேர்ந்த ரம்ஜானின் தந்தை, வங்கதேசத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டு அங்கு செட்டில் ஆகிவிட்டார். இதனால் பிழைப்புதேடி ம.பி மாநிலத்தின் போபால் நகரில் சுற்றித்திரிந்த ரம்ஜான் 2 வருடங்கள் முன்பு போலீசாரிடம் பிடிபட்டார். ஆவணங்கள் ஏதுமின்றி சுற்றித்திரிந்ததால் போலீசார் அந்த சிறுவனை தங்கள் பாதுகாப்பின்கீழ் கொண்டு வந்தனர்.
இதனிடையே கீதாவை பாகிஸ்தானில் இருந்து, இந்தியா அழைத்துவந்த, தன்னார்வலர் அன்சாரி, தற்போது ரம்ஜானை பாகிஸ்தான் அழைத்துச் செல்ல முயற்சி எடுத்துள்ளார். இதுதொடர்பாக குடியரசு தலைவரிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.