Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொழிலதிபர்களுக்காகவே மோடி ஆட்சி நடக்கிறது என கேஜ்ரிவால் சொல்வது உண்மையே: கருத்து கணிப்பு

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத்தில் மோடி தலைமையிலான ஆட்சி அதானி மற்றும் அம்பானி போன்ற தொழிலதிபர்கள் பயனடையத்தான் நடைபெறுகிறது என்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் சொல்வது சரிதான் என்று அம்மாநில மக்கள் கூறுவதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் தொடர்பாக சி.என்.என்.- ஐபிஎன் கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதில் பல மாநிலங்களைப் போல குஜராத்திலும் கள ஆய்வு மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

 'Gujarat people agree with development only for corporates '

அதில் 'அதானி, அம்பானி போன்ற தொழிலதிபர்கள் பயனடையத்தான் குஜராத்தில் ஆட்சி நடைபெறுகிறது என்று கேஜ்ரிவால் சொல்வது' பற்றியும் கேட்கப்பட்டிருக்கிறது.

கேஜ்ரிவால் சொல்வதை ஒப்புக் கொள்கிறோம் என்று 46% குஜராத் மக்கள் கூறியுள்ளனர். ஆனால் இதை ஏற்க முடியாது என்று 25% பேர் மட்டும்தான் தெரிவித்துள்ளனர். 29% பேர் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

வளர்ச்சி உண்மைதான்

அதே நேரத்தில் குஜராத் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது என 40% பேர் கூறியிருக்கின்றராம். ஆனால் அத்தகைய வளர்ச்சி அரசு கூறிக் கொள்வதைப் போல இல்லை என 15% பேரும் பெரும்பான்மையோருக்கு அந்த வளர்ச்சி திட்டங்கள் செல்லவில்லை என 23% பேரும் கூறியுள்ளனர்.

நல்ல அரசு, மிகப் பெரிய வளர்ச்சி என்பது எல்லாமே பொய் என்று 12% பேர் கூறியுள்ளனர்.

விலைவாசிதான் முதன்மை பிரச்சனை

இம்மாநிலத்தில் விலைவாசி உயர்வு தான் முதன்மை பிரச்சனை என 38% பேர் கூறியுள்ளனர். ஊழல்தான் முதன்மை பிரச்சனை என 12%, வேலைவாய்ப்பின்மைதான் பிரச்சனை என 12% கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+