For Daily Alerts
Just In
தொடர் விடுமுறை... திருமலையில் ஏழுமலையானை தரிசிக்க குவிந்த பக்தர்கள்
தொடர் விடுமுறை காரணமாக திருமலை திருப்பதியில் கூட்டம் நிரம்பி வழிந்து வருகிறது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
திருப்பதி: சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை வந்துள்ளதால் திருப்பதியில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியும், சுதந்திர தினமும் திங்கள், செவ்வாய் ஆகிய கிழமைகளில் வருகின்றன. மேலும் பள்ளி, கல்லூரி, அரசு, தனியார் ஊழியர்களுக்கு சனி, ஞாயிறுடன் சேர்த்து 4 நாள்கள் தொடர் விடுமுறை ஆகிவிட்டது.
இதனால் பல்வேறு இடங்களில் பணிபுரிவோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருவதால் கோயம்பேடு பஸ் நிலையம் மக்கள் கூட்டம் அலை அலையாக காணப்படுகிறது.
இன்னும் சிலர் இந்த 4 நாள்கள் விடுமுறையை பயன்படுத்திக் கொள்ள திருப்பதிக்கும் படையெடுத்து வருகின்றனர். இதனால் பக்தர்கள் கூட்டத்தால் திருப்பதியும் நிரம்பியுள்ளது. கூட்ட நெரிசலால் பக்தர்கள் அவதி அடைந்துள்ளனர். மேலும் அனைத்து அறைகளும் நிரம்பிவிட்டதால் மக்கள் ஆங்காங்கே தங்கியுள்ளனர்.
Comments
tirumala tirupathi two leaves oneindia tamil video திருமலை திருப்பதி விடுமுறை ஒன் இந்தியா தமிழ் வீடியோஸ்
English summary
On the acoount of continuous 4 days leave, this video shows that how Tirupathi is full of crowd and because of heavy rush, pilgrims are affected.
Story first published: Saturday, August 12, 2017, 15:03 [IST]