பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கட்ச் முன்னேறும்போது, காஷ்மீர் ஏன் வளர முடியாது: பிரச்சாரத்தில் மோடி
ஸ்ரீநகர்: பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கட்ச் பகுதியை வளர்ச்சி பாதைக்கு கொண்டுவந்த என்னால் காஷ்மீரையும் மேம்படுத்த முடியும் என்று பிரதமர் நரேந்திரமோடி அம்மாநில தேர்தல் பிரச்சாரத்தின்போது தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநில 3ம் கட்ட சட்டசபை தேர்தலையொட்டி தலைநகர் ஸ்ரீநகரில் இன்று மதியம் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாஜகவுக்கு ஆதரவு கேட்டு பிரதமர் மோடி உரையாற்றினார். கடந்த வெள்ளிக்கிழமை நடந்த தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து, மோடியின் பிரச்சார கூட்டத்திற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

கூட்டத்தில் உரையாற்றிய மோடி "பிரதமரான பிறகு நான் காஷ்மீருக்கு வராத மாதமே கிடையாது. ஒவ்வொரு மாதமும் உங்கள் மாநிலத்தில்தான் இருக்கிறேன். காஷ்மீர் மக்கள் என்மீது வைத்துள்ள அன்பை, வளர்ச்சி என்னும் வட்டியோடு நான் திரும்ப தருவேன். காஷ்மீரில் இரு தலைமுறைகளாக வேலை வாய்ப்பு உருவாக்கப்படவில்லை. இரு தலைமுறையினர் வேலையின்றி தவிக்கும் கொடுமை நடக்கிறது.
நீங்கள் அனுபவிக்கும் வேதனை உங்களுடையது கிடையாது, என்னுடையது. இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி காஷ்மீர் என்று உலகிற்கு காண்பிக்க வளர்ச்சிதான் சிறந்த வழி. எனவே காஷ்மீரை மேம்படுத்துவதில் எனது அரசு உறுதி பூண்டுள்ளது. வாஜ்பாய் தொடங்கி வைத்த காஷ்மீர் வளர்ச்சி திட்டங்களை நான் நிறைவேற்றி தருவேன்.
காஷ்மீரில் பழையபடி சுற்றுலா துறையை வளர்த்தெடுத்தால், வேலைவாய்ப்பு பெருகும். இளைஞர்களுக்கு பலன் கிடைக்கும். வேலை தேடி காஷ்மீர் இளைஞர்கள் வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது.
காஷ்மீரில் வெள்ளம் சூழ்ந்தபோது இம்மாநில அரசு தூங்கிக் கொண்டிருந்தது. வெள்ள நிவாரணத்திற்காக மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தபோது அதை மாநில அரசுக்கு அளிக்க வேண்டாம், நேரடியாக மத்திய அரசே நிவாரணத்தை அளிக்க வேண்டும் என்று காஷ்மீர் மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஏனெனில் மாநில அரசு அதிலும் ஊழல் செய்துவிடும் என்று மக்கள் அச்சப்பட்டனர்.
மத்தியில் பாஜக ஆட்சி வந்தபிறகு காஷ்மீரில் நடத்தப்பட்ட கூட்டுக்கொள்ளை தடுக்கப்பட்டுள்ளது. ஊழலை ஒழித்தது போல தீவிரவாதமும் ஒழித்துக்கட்டப்படும். ஜவான்களும், போலீசாரும், சாமானிய மக்களும் அன்றாடம் கொலை செய்யப்படுவதை பார்த்துக் கொண்டு இருக்கமாட்டோம். ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் காஷ்மீரில் நிலைநிறுத்தப்படும்.
குஜராத் மாநிலம் கட்ச் பகுதி பூகம்பத்தால் சீர்குலைந்து போனபோது முதல்வராக இருந்த நான், அதனை மீட்டு தற்போது ஒரு முன்னேறிய பகுதியாக மாற்றியுள்ளேன். கட்ச் பகுதியை மேம்படுத்த முடியும்போது ஏன் காஷ்மீரை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல முடியாது. காஷ்மீரை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல பாஜகவுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு நரேந்திரமோடி பேசினார்.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications