தமிழக எதிர்ப்பை சமாளிக்க புது வியூகம்? யாழ்.க்கு மன்மோகன்சிங் பயணம்?
டெல்லி: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதுடன் தமிழகத்தின் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் யாழ்ப்பாணத்துக்கும் பிரதமர் மன்மோகன்சிங் சென்று வரலாம் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் யோசனை தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
பல லட்சம் தமிழர்களை படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பது தமிழக அரசு மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளின் கோரிக்கை. அத்துடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் மற்றும் ஜி.கே.வாசன் ஆகியோரும் கூட எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்றால் எதிர்ப்பு தெரிவித்து வரும் மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் மத்திய அரசுக்கும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இசைப்பிரியா வீடியோ
இந்நிலையில் தமிழீழ செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியாவை உயிரோடு இலங்கை ராணுவம் கைது செய்து பலாத்காரம் செய்து பின்னர் படுகொலை செய்திருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி தமிழகத்தை உறைய வைத்திருக்கிறது. இதனால் மத்திய அரசு கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கிறது.

இக்கட்டில் மத்திய அரசு
இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள டெல்லி வெளியுறவுத் துறை அமைச்சகம் பல்வேறு யோசனைகளை முன்வைத்து வருகிறது. பிரதமர் மன்மோகன்சிங்குக்கு பதிலாக துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி அல்லது வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இம்மாநாட்டில் கலந்து கொள்ளலாம் என்று யோசனை முன்வைக்கப்பட்டது.

கொழும்புக்கும் யாழுக்கும் விசிட்
அதே நேரத்தில் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழக எதிர்ப்பை ஏன் உருவாக்கிக் கொள்ள வேண்டும்? என்றும் காங்கிரஸ் கட்சி கருதுகிறது. இதனால் கொழும்பு காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வதுடன் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணப் பகுதிக்கும் பிரதமர் மன்மோகன்சிங் சென்றால் தமிழர்களை சற்றே சமாதானப்படுத்தலாம் என்று ஒரு யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது.

உறுதிப்படுத்தும் சுதர்சன நாச்சியப்பன்
இந்த யோசனையை வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளும் பிரதமர் மன்மோகன்சிங்குடன் ஆலோசித்திருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாக மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பனும் கூட, யாழ்ப்பாணத்துக்கு நிச்சயம் பிரதமர் மன்மோகன்சிங் செல்ல வேண்டும். அப்படி சென்றால் தமிழர்கள் அதை வரவேற்பார்கள் என்று முன்னோட்டமாக கருத்து தெரிவித்திருக்கிறார். இதனால் பிரதமர் மன்மோகன்சிங் யாழ்ப்பாணத்துக்கு செல்லும் அறிவிப்பு விரைவில் வெளியாகக் கூடும் என்று தெரிகிறது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications