இந்தியாவை நீங்க தாராளமா நம்பலாம் – நம்பிக்கையான நாடுகள் வரிசையில் 2 ஆவது இடம்!
டெல்லி: உலகின் நம்பிக்கையான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 2 ஆவது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பிடித்துள்ளது.
உலக அளவில் பல நாடுகளின் நம்பகத்தன்மை வீழ்ச்சியடைந்து வருகின்றன.
இந்த நிலையில்அதிக நம்பகத்தன்மை வாய்ந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 2 ஆவது இடம் கிடைத்துள்ளது.
நம்பிக்கை குறித்த சர்வே:
சுவிட்சர்லாந்தை சேர்ந்த டாவோஸ் ரிசார்ட்டு உலகிலுள்ள நாடுகளில் வாழ்ந்து வரும் மக்கள் அரசு நிறுவனங்கள், ஊடகங்கள், தொழில் நிறுவனங்கள், அரசு, மற்றும் அரசு சாரா அமைப்புகள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை பற்றி ஆராய்ந்து சர்வே நடத்தியது.
6 நாடுகளுக்கு மட்டும் இடம்:
இதில், அதிக நம்பகத்தன்மை வாய்ந்த நாடுகளின் வரிசையில் இந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா, சீனா, நெதர்லாந்து உள்ளிட்ட 6 நாடுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
8 நியூட்ரல் நாடுகள்:
அதேபோல், நம்பகத்தன்மை குறைந்து வரும் நாடுகளாக ஜப்பான், ரஷ்யா, ஹாங்காங், தென் ஆப்பிரிக்கா மற்றும் இத்தாலி உள்ளிட்ட 13 நாடுகளை குறிப்பிட்டுள்ளது. பிரேசில், மலேசியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 8 நாடுகள் "இரண்டும் கெட்டான்" நாடுகளாக கருதப்படுகிறது.
பொருளாதார வீழ்ச்சி:
டிரஸ்ட் இண்டக்ஸ் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த சர்வேயில், கடந்த 2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் பொதுமக்கள் அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கை 50 சதவீதத்திற்கும் கீழேயே உள்ளது. உலகில் உள்ள 3 இல் ஒரு பங்கு நாடுகளில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு இரண்டு:
சென்ற ஆண்டு 5 ஆவது இடத்தில் இருந்த இந்தியா இந்த முறை 2 ஆவது இடத்திற்கு முன்னேறியிருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததே காரணம் என்பதை இந்த சர்வே சுட்டிக்காட்டியுள்ளது.
அரசியல் நம்பிக்கை:
குறிப்பாக, அரசியல் தலைவர்களின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை 82 சதவீதமாக இந்தியாவில் உள்ளதாக தெரிவித்துள்ளது. 53 ஆண்டுகளுக்கு பிறகு இந்த புதிய உச்சத்தை இந்தியா எட்டியுள்ளது.