எல்லைப் பகுதியில் 2,500 வீரர்கள் குவிப்பு.. சீனாவுக்கு எதிராக இந்தியா அதிரடி
இந்திய சீன எல்லையில், பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில் இந்திய ராணுவம் மேலும் 2,500 வீரர்களைக் குவித்துள்ளது.
காங்டாக்: சீனாவை ஒட்டியுள்ள எல்லையில் இந்தியா ராணுவம் கண்காணிப்பை வலுப்படுத்தியுள்ளது. சிக்கிம் எல்லையில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ள பகுதியில் மேலும் 2,500 வீரர்களை இந்தியா குவித்துள்ளது.இதனால் அங்கு எழுந்த போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
பூடானுக்கு சொந்தமான டோக்லாம் பீடபூமியை ஆக்ரமித்துள்ள சீனா, சிக்கிம் மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும் சர்ச்சையில் ஈடுப்பட்டுள்ளது. அங்கு சாலை அமைக்கும் பணியை சீன வீரர்கள் செய்ய தொடங்கினர். இதில்தான் பிரச்சனை முற்றியது.

இதையடுத்து ஏற்பட்டுள்ள மோதல் போக்கு கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், இந்திய சீன எல்லையில் இரு தரப்பும் படை வீரர்களை போட்டிப் போட்டுக் குவித்து வருகிறது.
சிக்கிமிற்கும் பூடானுக்கும் இடையே சீனாவுக்கு சொந்தமான சும்பி பள்ளத்தாக்கை ஒட்டிய பகுதியில் அந்நாடு மேலும் படைவீரர்களை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக சிக்கிம் எல்லையில் 2,500 வீரர்களை இந்தியா நிறுத்தியுள்ளது.
இதே போல் ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் முதல் அருணாசல பிரதேசம் வரை சீனாவை ஒட்டி 4,057 கிலோ மீட்டர் நீளத்துக்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எந்த நேரமும் போர் தொடங்கலாம் என்ற நிலை நீடிக்கிறது.
ஆனால் இன்று, இந்திய சீன எல்லைப் பிரச்சனை என்பது தாற்காலிகமானதுதான், இந்த விஷயத்தில் இந்திய தனியார் தொலைக்காட்சிகள் கூறுவதை யாரும் நம்ப வேண்டாம் என்று சீன வெளியுறவு அதிகாரி ஒருவர் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications