எல்லைப் பகுதியில் 2,500 வீரர்கள் குவிப்பு.. சீனாவுக்கு எதிராக இந்தியா அதிரடி
இந்திய சீன எல்லையில், பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கில் இந்திய ராணுவம் மேலும் 2,500 வீரர்களைக் குவித்துள்ளது.
காங்டாக்: சீனாவை ஒட்டியுள்ள எல்லையில் இந்தியா ராணுவம் கண்காணிப்பை வலுப்படுத்தியுள்ளது. சிக்கிம் எல்லையில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ள பகுதியில் மேலும் 2,500 வீரர்களை இந்தியா குவித்துள்ளது.இதனால் அங்கு எழுந்த போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
பூடானுக்கு சொந்தமான டோக்லாம் பீடபூமியை ஆக்ரமித்துள்ள சீனா, சிக்கிம் மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதிகளிலும் சர்ச்சையில் ஈடுப்பட்டுள்ளது. அங்கு சாலை அமைக்கும் பணியை சீன வீரர்கள் செய்ய தொடங்கினர். இதில்தான் பிரச்சனை முற்றியது.

இதையடுத்து ஏற்பட்டுள்ள மோதல் போக்கு கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், இந்திய சீன எல்லையில் இரு தரப்பும் படை வீரர்களை போட்டிப் போட்டுக் குவித்து வருகிறது.
சிக்கிமிற்கும் பூடானுக்கும் இடையே சீனாவுக்கு சொந்தமான சும்பி பள்ளத்தாக்கை ஒட்டிய பகுதியில் அந்நாடு மேலும் படைவீரர்களை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இதன் காரணமாக சிக்கிம் எல்லையில் 2,500 வீரர்களை இந்தியா நிறுத்தியுள்ளது.
இதே போல் ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் முதல் அருணாசல பிரதேசம் வரை சீனாவை ஒட்டி 4,057 கிலோ மீட்டர் நீளத்துக்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எந்த நேரமும் போர் தொடங்கலாம் என்ற நிலை நீடிக்கிறது.
ஆனால் இன்று, இந்திய சீன எல்லைப் பிரச்சனை என்பது தாற்காலிகமானதுதான், இந்த விஷயத்தில் இந்திய தனியார் தொலைக்காட்சிகள் கூறுவதை யாரும் நம்ப வேண்டாம் என்று சீன வெளியுறவு அதிகாரி ஒருவர் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
-
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
சார் உங்களுக்கு ஒரு சல்யூட்! நள்ளிரவில் ரயில் நிலையத்தில் தவித்த பெண்! யோசிக்காமல் உதவிய ராணுவ வீரர் -
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. நாடாளுமன்றத்தில் கொந்தளித்த எதிர்க்கட்சி எம்பிக்கள்! -
பெங்களூரில் ஒரு ரகசிய உலகம்.. இருட்டில் மின்னிய தகாத உறவுகள்! 40 லட்சம் பேராயும் போட்டுடைத்த க்ளீடன் -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
படிச்சு படிச்சு சொன்னோமே சண்டை வேணாம்னு! இப்போ பொணத்தைக் கூட எரிக்க முடியல! இப்படி ஒரு சிக்கலா? -
மக்களே கவலை வேண்டாம்.. கேஸ் சிலிண்டர் சப்ளை சீராகிவிட்டதாம்.. அடித்து சொல்லும் மத்திய அரசு -
ஐடி வேலை போனால் என்ன.. அமெரிக்காவிலேயே டீக்கடையை போட்ட இந்திய ஐஐடி பட்டதாரி! -
மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர் -
ரூ 30,00,00,00,00,000 கோடி பஸ்பம்.. கதறும் இந்திய முதலீட்டாளர்கள்.. ஒவ்வொரு நாளும் மரண அடி -
ஒரே நாளில் ரூ.17 லட்சம் உயர்ந்த பரிசு தொகை! இந்திய டீமுக்கு ஜாக்பாட்! எல்லாத்துக்கும் காரணம் டிரம்ப் -
வளைகுடா போர்.. விளக்கமளித்த ஜெய்சங்கர்! விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்












Click it and Unblock the Notifications