அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட 14 இந்திய மாணவர்கள்
ஹைதராபாத்: அமெரிக்காவுக்கு படிக்கச் சென்ற இடத்தில் இரண்டு கல்லூரிகள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டதால் 33 இந்திய மாணவர்களின் எதிர்கால கனவு கலைந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சிலிக்கான் வேலி பல்கலைக்கழகம் மற்றும் நார்த் வெஸ்டர்ன் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவை விதிமுறைகளை மீறியதாகக் கூறி அதிகாரிகள் அதை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளனர். இதையடுத்து அந்த பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த 14 மாணவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு, எப்.பி.ஐ. அதிகாரிகளால் 15 மணிநேரம் விசாரிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள அந்த கல்லூரிகளில் படிக்க ஹைதராபாத்தில் இருந்து கிளம்பிய 19 மாணவர்களை விமானத்தில் ஏற ஏர் இந்தியா அனுமதிக்கவில்லை. அமெரிக்கா சென்று கஷ்டப்படுவதை தவிர்க்கவே அந்த மாணவர்களை விமானத்தில் ஏறவிடவில்லை என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள அந்த 2 கல்லூரிகளில் படிக்க செல்லும் மாணவர்களுக்கு டிக்கெட் அளிக்க வேண்டாம் என்று ஏர் இந்தியா டிராவல் நிறுவனங்கள் மற்றும் ஏஜெண்டுகளை கேட்டுக் கொண்டுள்ளது.
நாடு கடத்தப்பட்டுள்ள மாணவர்களில் பலர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள். முன்னதாக அமெரிக்காவில் உள்ள ட்ரை வேலி பல்கலைக்கழகம் விதிமுறைகளை மீறியதால் மூடப்பட்டது. இதனால் அங்கு படித்த இந்திய மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியானது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications