கரண்ட்ட ஏன்டா நிறுத்தினிங்க? மின்வாரிய ஊழியர்களை ஓட ஓட துப்பாக்கியால் சுட்ட முன்னாள் நீதிபதி!
பவர் கட்டானதால் ஆத்திரமடைந்த முன்னாள் நீதிபதி மின்வாரிய ஊழியர்களை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி: குர்கானில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த முன்னாள் நீதிபதி மின்வாரிய ஊழியர்களை ஓட ஓட துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதையடுத்து அந்த நீதிபதி மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி: அருகே உள்ள குர்கானைச் சேர்ந்த ஏ.கே.ராகவ் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது வீட்டின் அருகே மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
நேற்று மாலை வயர்களை மாற்றும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த பணி காரணமாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டடதாக தெரிகிறது.
மேலும் பல முறை மின்சாரம் போய் போய் வந்துள்ளது. ஒரு கட்டத்தில் போன மின்சாரம் நீண்ட நேரமாகியும் வரவில்லை.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட நீதிபதி
இதனால் ஆத்திரம் அடைந்த முன்னாள் நீதிபதி ராகவ், வெளியே வந்து மின்வாரிய ஊழியர்களை கண்டித்துள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

துப்பாக்கியால் சுட்ட நீதிபதி
இதையடுத்து வீட்டில் தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்த முன்னாள் நீதிபதி ராகவ் வானத்தை நோக்கி சுட்டு மிரட்டியுள்ளார். பின்னர் ஊழியர்களை நோக்கியும் சரமாரியாக சுட்டுள்ளார்.

ஓட்டம் பிடித்த ஊழியர்கள்
இதனால் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓட்டம் பிடித்துள்ளனர் ஊழிர்யர்கள். ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

நீதிபதி மீது வழக்கு
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மின்வாரிய ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், ஊழியர்களை கொலை செய்ய முயன்றதாக முன்னாள் நீதிபதி ராகவ் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டால் பரபரப்பு
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராகவ் மின்வாரிய ஊழியர்களை சுட்டபோது அந்த தோட்டாக்கள் டிராக்டர் டிராலி மற்றும் அதன் டயர்களை தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications