உச்சநீதிமன்றத்தின் பிடிவாரண்ட்.... கோர்ட்டில் ஆஜராகமாட்டேன்: நீதிபதி கர்ணன்
உச்சநீதிமன்றத்தின் பிடிவாரண்ட்டை ஏற்று நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டேன் என நீதிபதி கர்ணன் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் பிடிவாரண்ட்டை ஏற்று ஆஜராகப் போவதில்லை என கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு அவர் மாற்றப்பட்டார்.

ஆனால் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷண் கவுல் பிறப்பித்த உத்தரவை வழக்காக எடுத்து அதற்கு தடை விதித்தார் கர்ணன். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது.
இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்துக்கு போனது. நீதிபதி கர்ணன் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம், அவரை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு மாற்றியது.
அத்துடன் நீதிபதி கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்து அவரை ஆஜராக உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இரண்டு முறை உச்சநீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டும் நீதிபதி கர்ணன் அதை ஏற்கவில்லை.
இதனால் நீதிபதி கர்ணனுக்கு ஜாமீனில் வரக் கூடிய பிடிவாரண்ட்டை கடந்த வாரம் உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. இது தொடர்பாக கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் நேற்று பேசிய நீதிபதி, என் மீது தானாக முன்வந்து உச்சநீதிமன்றம் அவமதிப்பு வழக்கு பதிவு செய்திருப்பது என்னை தொல்லை செய்வதற்குத்தான். மார்ச் 31-ந்தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகவும் மாட்டேன் என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
-
ஓபிசி கிரீமிலேயர்.. பெற்றோரின் சம்பளத்தை வைத்து மட்டுமே தீர்மானிக்க கூடாது.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
"பொது சிவில் சட்டம் தான் ஒரே தீர்வு.." முஸ்லீம் பெண்கள் பிரச்சனை.. அழுத்தமாக சொன்ன உச்ச நீதிமன்றம் -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட்












Click it and Unblock the Notifications