பெங்களூரு மெட்ரோவில் இந்தி போர்டுகளை அகற்றுங்கள்... மோடிக்கு சித்தராமையா கடிதம்
பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள இந்தி போர்டுகளை அகற்றவேண்டும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்தியில் பெயர் பலகை வைப்பதற்கு, எதிர்ப்பு தெரிவித்தும், இருக்கும் போர்டுகளை அகற்றவும், கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், ' மெட்ரோ ரயில் நிலையங்களில் வைத்துள்ள இந்தி பெயர் பலகை கன்னட மக்களின் உரிமையை பறிப்பதாக அமைந்துள்ளது என்றும், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பெயர் பலகை வைப்பதே சரியாக இருக்கும்' என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்பை ஏற்க முடியாது எனக் கூறியுள்ள அவர், மாநிலத்தில் நடைபெற்று வரும் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களை கருத்தில்கொண்டு, மத்திய அரசு இந்த கோரிக்கையை பரிசீலிக்கும்படியும் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, பெங்களூரு மெட்ரோ ரயில் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள இந்தி பெயர் பலகைகளில் தார் பூசி அழிக்கும் போராட்டத்தை, கன்னட அமைப்புகள் கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகின்றன.
இந்த போராட்டம் தீவிரமடைந்து வருவதால், மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள இந்தி பெயர் பலகைகளை அகற்ற, கர்நாடக அரசின் அனுமதியை, பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் கேட்டிருந்தது. ஆனால், இதுபற்றி, நேரடியாகப் பதில் அளிக்காமல், முதலமைச்சர் சித்தராமையா தற்போது மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications