கர்நாடகா: சித்தராமையாவுக்கு 41% தலித் ஆதரவு... எடியூரப்பாவிற்கு 39% பிராமணர்கள் ஆதரவு - சர்வே
கர்நாடகாவில் 41 சதவிகிதம் தலித் மக்கள் சித்தராமையா முதல்வராக ஆதரவு தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.3 4 சதவிகித பிராமண ஜாதியினர் ஆதரவு எடியூ
Recommended Video

பெங்களூரு: கர்நாடகாவில் சித்தராமையா மீண்டும் முதல்வராக 41 சதவிகிதம் தலித் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கான சட்டசபைத் தேர்தல் மே 12ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி, பாஜக, மஜத கட்சிகளிடையே பலத்த போட்டி நிலகிறது.

வெற்றி பெற்று யார் மீண்டும் முதல்வராவார் என இந்தியா டுடே தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. 41 சதவிகிதம் தலித் மக்கள் சித்தராமையா முதல்வராக ஆதரவு தெரிவித்துள்ளதாக அந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
பாஜகவின் எடியூரப்பாவுக்கு 20 சதவிகித தலித்துகளே ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், குமாரசாமிக்கும் 20 சதவிகித தலித்துகள் ஆதரவு அளித்துள்ளதாகவும் இந்தியா டுடே நடத்தியுள்ள கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
கர்நாடகாவில் தலித் சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். அவர்களின் வாக்கு வங்கி 23 சதவீதம் ஆகும். எனவே இங்கு போட்டியிடும் கட்சிகள் தலித் வாக்கு வங்கியை, வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் காரணியாக பார்க்கின்றன என்பதால் அதன் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்கும்.
சித்தராமையா தலித் வாக்குகளை அப்படியே அறுவடை செய்ய வேண்டும் என்று குறி வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார். தலித்துகளின் வாக்குகளை அப்படியே அள்ளினால் ஆட்சியை தக்க வைக்க உதவும் என்பது அவரது கணக்கு. பாஜக தலித்துகளுக்கு எதிரானது என்று சித்தரிக்க காங்கிரஸ் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இது தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பிலும் எதிரொலித்துள்ளது.
1989இல் உருவாக்கப்பட்ட தாழ்த்தப்பட்டோருக்கான வன்கொடுமை தடுப்பு சட்டம் அமலில் இருந்து வந்தது. இந்நிலையில் அந்த சட்டத்தை நீர்த்து போக செய்யும் அளவுக்கு உச்சநீதிமன்றம் கடந்த மார்ச் 20ஆம் தேதி அதில் திருத்தங்களை மேற்கொண்டது. தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமை சட்டத்தை திருத்தியமைத்ததை கண்டித்து வடமாநிலங்களில் தலித்துகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பலர் கொல்லப்பட்டனர். இது கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது தலித் வீட்டில் விருந்து சாப்பிட்டாலும் எடியூரப்பாவிற்கு ஆதரவு என்னவோ 20 சதவிகிதம்தான் என ஒப்பீனியன் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் சித்தராமையா மீண்டும் முதல்வராக 41 சதவிகிதம் தலித் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
இதனிடையே 34 சதவிகித பிராமண ஜாதியினர் ஆதரவு எடியூரப்பாவுக்கு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் 20 சதவிகிதம் பிராமணர்கள் சித்தராமையாவுக்கு ஆதரவு அளித்துள்ளனர். 19 சதவிகிதம் பிராமணர்கள் குமாரசாமிக்கு ஆதரவு அளித்துள்ளதாக அந்த கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
எது எப்படியே கர்நாடகவில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்குமா? பாஜக ஆட்சியை தட்டிப்பறிக்குமா என்பது மே 12ஆம் தேதி தெரிந்து விடும்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications