'டுபாக்கூர் சான்றிதழ்': முன்னாள் அமைச்சர் தோமரை கட்சியிலிருந்தும் கட்டம் கட்டுகிறார் கேஜ்ரிவால்!
டெல்லி: போலி சான்றிதழ் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முன்னாள் சட்ட அமைச்சர் ஜிதேந்திரசிங் தோமரை ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்குவதற்கு முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்லி மாநில சட்ட அமைச்சராக இருந்தவர் ஜிதேந்திரசிங் தோமர். இவர் பி.எஸ்.சி. மற்றும் சட்டக் கல்வி பயின்றதாக கூறி சான்றிதழ்களைத் தாக்கல் செய்திருந்தார். இவரது சட்டக் கல்வி சான்றிதழ் போலியானது என பார்கவுன்சில் போலீசில் புகார் செய்தது.

இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், ஜிதேந்திரசிங் தோமரை கைது செய்தனர். பின்னர் அவரது பி.எஸ்.சி. சான்றிதழும் போலியானது எனத் தெரிய வந்தது. இந்த சர்ச்சைகளால் தமது அமைச்சர் பதவியை தோமர் ராஜினாமா செய்தார்.
இருப்பினும் ஆம் ஆத்மி கட்சிக்கு இது பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தி அடைந்துள்ள அரவிந்த் கேஜ்ரிவால், தோமரை கட்சியில் இருந்து நீக்கவும் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு ஆராய்ந்து வருகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications