குழந்தைக்கு பெயர் வைப்பதில் கலப்பு திருமணம் செய்த தம்பதிக்குள் தகராறு: நீதிபதி செய்த வேலையை பாருங்க!
பெயர் வைப்பது தொடர்பாக கணவனும் மனைவியும் சண்டை போட்டுக்கொண்டதால் நீதிமன்றமே குழந்தைக்கு பெயர் சூட்டியுள்ளது.
Recommended Video

திருவனந்தபுரம்: பெயர் வைப்பது தொடர்பாக கணவனும் மனைவியும் சண்டை போட்டுக்கொண்டதால் நீதிமன்றமே குழந்தைக்கு பெயர் சூட்டிய ருசிகர சம்பவம் கேரளாவில் அரங்கேறியுள்ளது.
நீதிமன்றங்கள் அவ்வப்போது விநோதமான வழக்குகளை சந்தித்து வருவது வழக்கமான ஒன்றுதான். குறிப்பாக கணவன் மனைவிக்குள் ஏற்படும் வித்தியாசமான சண்டை சச்சரவுகள் மற்றும் கால்நடைகள் தொடர்பான வழக்குகள் அதிக கவனம் ஈர்க்கும்.
அந்த வகையில் கேரள உயர்நீதிமன்றம் ஒரு வித்தியாசமான வழக்கை சந்தித்துள்ளது. அதாவது கலப்பு திருமணம் செய்த ஒரு தம்பதி தங்களின் குழந்தைக்கு பெயர் வைப்பது தொடர்பான வழக்குதான் அது.

பெயர் வைப்பதில் பிரச்சனை
கலப்பு திருமணம் செய்த ஒரு கிறிஸ்தவ பெண்ணுக்கும், இந்து ஆணுக்கும் அண்மையில் இரண்டாவதாக ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு பெயர் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

தாயிடம் குழந்தை
கணவன்-மனைவி இருவரும் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அந்த குழந்தை, தற்போது தாயின் பராமரிப்பில் உள்ளது.

எங்கள் பெயரைதான் சூட்டவேண்டும்
குழந்தைக்கு ‘ஜோகன் மணி சச்சின்' என்று ஞானஸ்நானம் செய்யப்பட்டு இருப்பதால், அதே பெயரையே சூட்ட வேண்டும் என்று தாயார் தரப்பு வாதிட்டது. ஆனால், குழந்தை பிறந்த 28-வது நாளில், இந்து முறைப்படி சூட்டப்பட்ட ‘அபிநவ் சச்சின்' என்ற பெயரே இருக்க வேண்டும் என்று தந்தை தரப்பு வாதிட்டது.

முடிவுக்கு வந்த நீதிபதி
இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் விட்டுகொடுக்காமல் தங்களின் வாதத்தில் விடாபிடியாக இருந்தனர். அவர்களின் வாதங்களை பொறுமையாக கேட்ட நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார் ஒரு முடிவுக்கு வந்தார்.

இதில் பாதி அதில் பாதி
அதாவது இருதரப்பையும் சமாதானப்படுத்தும் வகையில், குழந்தைக்கு ‘ஜோகன் சச்சின்' என்று தானே பெயர் சூட்டினார். தாயாரை திருப்திப்படுத்த ‘ஜோகன்' என்ற பெயரையும், தந்தையை திருப்திப்படுத்த ‘சச்சின்' என்ற பெயரையும் எடுத்துக்கொண்டதாக அவர் கூறினார்.

தீர்ப்புக்கு வரவேற்பு
குழந்தையை பள்ளியில் சேர்க்க பிறப்பு சான்றிதழ் அவசியம் என்பதால், 2 வாரங்களுக்குள் இந்த பெயரில் பிறப்பு சான்றிதழ் வழங்குமாறு நகராட்சி பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதியின் இந்த தீர்ப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
அனுமதியின்றி எடுக்கப்படும் கற்களுக்கு டன் 1க்கு வெறும் ரூ.25 அபராதம் ? கனிமவளத்துறைக்கு நோட்டீஸ் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications