கேரளாவில் கன மழை: நிலச்சரிவால் குமுளி- தேனி சாலை துண்டிப்பு
இடுக்கி: கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால் குமுளி மலைச் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு, 3 இடங்களில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால், தமிழக-கேரள போக்குவரத்து முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கேரளா அருகே அரபிக் கடலுக்கு நகர்ந்தது. இதனால் கேரளாவில் தொடர் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் கேரளாவின் தென் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல சாலைகள் ஸ்தம்பித்துள்ளன. வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் முடங்கியுள்ளனர்.
வீடுகள் இடிந்தன
திருவனந்தபுரத்தில் இதுவரை பெய்த மழைக்கு 245 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சாலைகளில் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இடிக்கியுலும் தொடர் மழை பெய்து வருகிறது. இதில் ஒரு பெண் மின்னல் தாக்கி பலியானார்.
மீன்பிடித்தொழில் பாதிப்பு
கோவளம் பகுதியிலும் பலத்த மழை பெய்து வருவதால் மீனவர்கள் பல நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த மழை கோவளம் மீனவர்களின் படகுகளை கடலுக்கு இழுத்துச் சென்றது.
நெடுஞ்சாலை பாதிப்பு
குமுளி- தேனி இடையேயான நெடுஞ்சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும் சாலை ஓர சுவர் இடிந்து விழுந்ததில், நெடுசாலை மூடப்பட்டுள்ளது. நெய்யாறின் கரையிலும் பெரிய மரங்கள் மழையால் சாய்ந்துவிட்டது.
3 இடங்களில் நிலச்சரிவு
தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால், லோயர் கேம்ப்-குமுளி சாலையில் வழிவிடு முருகன் கோயில், மாதா கோயில் வளைவு, எஸ் குண்டூசி வளைவு ஆகிய 3 இடங்களில் புதன்கிழமை மதியம் 2 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
அரசு பேருந்து சிக்கியது
மதுரையிலிருந்து குமுளி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து நிலச்சரிவில் சிக்கிக் கொண்டது. பின்னர், பேருந்திலிருந்து பயணிகள் இறக்கப்பட்டு, குமுளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், தேனி-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் லோயர் கேம்ப்பில் நிறுத்தப்பட்டன. கேரளம் செல்லும் வாகனங்கள் புதன்கிழமை மாலையிலிருந்து கம்பமெட்டு சாலையில் திருப்பி விடப்பட்டன.
நடந்து செல்லும் பயணிகள்
கேரளத்துக்கு வேலைக்கு சென்றிருந்த தமிழக தோட்டத் தொழிலாளர்களும், தமிழகத்தில் படிக்கும் கல்லூரி மாணவர்களும் 6 கி.மீ. தொலைவுக்கு லோயர் கேம்ப்-குமுளி மலைப் பாதையில் நடந்தே சென்றனர்.
2 நாட்களுக்கு நிறுத்தம்
இந்த நிலச்சரிவினை சீர்செய்யும் பணியில், மேகமலை வனச் சரணாலய அதிகாரிகளும், காவல் துறையினரும் ஈடுபட்டுள்ளனர். மேலும், நிலச்சரிவை சரிசெய்ய 2 நாள்கள் வரை ஆகலாமென்றும், அதுவரை போக்குவரத்து நிறுத்தப்படுவதாகவும், வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications