நதிநீர் இணைப்பு திட்டத்தால் பேரழிவு ஏற்படும்: கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் 'பூச்சாண்டி'!
பெங்களூர்: கங்கையையும் காவிரியையும் இணைக்கும் திட்டத்தை நரேந்திரமோடி செயல்படுத்தும் முன்பு அனைத்து மாநிலங்களின் கருத்துக்களையும் கட்டாயம் கேட்க வேண்டும் என்று கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார். நதிநீர் இணைப்பால் பேரழிவு ஏற்படும் என்று ஆய்வறிக்கைகள் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கில் கர்நாடகா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் வாதாடிவருகிறார். தனியார் நிகழ்ச்சிக்காக
பெங்களூர் வந்த ஃபாலி நாரிமனை சந்தித்து பேச கர்நாடக நீர்பாசன அமைச்சர் பாட்டீல் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்: கங்கா-காவிரி நதிகளை இணைக்க வேண்டும்
என்பது பிரதமர் நரேந்திரமோடியின் திட்டமாக உள்ளது. இதில் கருத்து கூற நான் நிபுணத்துவம் பெற்றிருக்கவில்லை. அதே நேரம், நதிநீர் இணைப்பு குறித்து இதற்கு முன்பு நடைபெற்ற பல
ஆய்வுகளின் முடிவுகளில், இந்த திட்டம் சில பகுதிகளுக்கு பலன் தந்தாலும், சில பகுதிகளில் சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்திவிடும் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே அதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல மாநிலங்கள் தங்களுக்குள் நதிநீர் பங்கீடு தொடர்பாக பிரச்சினையில்
ஈடுபட்டுள்ளதையும் அரசு கவனத்தில் வைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் நதிநீர் மீது இருக்கும் உரிமையை மத்திய அரசு கவனத்தில் வைத்திருக்க வேண்டும். அனைத்து
மாநிலங்களின் கருத்தையும் கேட்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கூடாது என்றார்.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications