நதிநீர் இணைப்பு திட்டத்தால் பேரழிவு ஏற்படும்: கர்நாடக நீர்ப்பாசன அமைச்சர் 'பூச்சாண்டி'!
பெங்களூர்: கங்கையையும் காவிரியையும் இணைக்கும் திட்டத்தை நரேந்திரமோடி செயல்படுத்தும் முன்பு அனைத்து மாநிலங்களின் கருத்துக்களையும் கட்டாயம் கேட்க வேண்டும் என்று கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார். நதிநீர் இணைப்பால் பேரழிவு ஏற்படும் என்று ஆய்வறிக்கைகள் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கில் கர்நாடகா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் வாதாடிவருகிறார். தனியார் நிகழ்ச்சிக்காக
பெங்களூர் வந்த ஃபாலி நாரிமனை சந்தித்து பேச கர்நாடக நீர்பாசன அமைச்சர் பாட்டீல் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்: கங்கா-காவிரி நதிகளை இணைக்க வேண்டும்
என்பது பிரதமர் நரேந்திரமோடியின் திட்டமாக உள்ளது. இதில் கருத்து கூற நான் நிபுணத்துவம் பெற்றிருக்கவில்லை. அதே நேரம், நதிநீர் இணைப்பு குறித்து இதற்கு முன்பு நடைபெற்ற பல
ஆய்வுகளின் முடிவுகளில், இந்த திட்டம் சில பகுதிகளுக்கு பலன் தந்தாலும், சில பகுதிகளில் சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்திவிடும் என்று கூறப்பட்டுள்ளது.
எனவே அதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல மாநிலங்கள் தங்களுக்குள் நதிநீர் பங்கீடு தொடர்பாக பிரச்சினையில்
ஈடுபட்டுள்ளதையும் அரசு கவனத்தில் வைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் நதிநீர் மீது இருக்கும் உரிமையை மத்திய அரசு கவனத்தில் வைத்திருக்க வேண்டும். அனைத்து
மாநிலங்களின் கருத்தையும் கேட்காமல் மத்திய அரசு தன்னிச்சையாக நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கூடாது என்றார்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications