மேற்கு வங்கத்தில் இருந்து வேறு மாநிலங்களுக்கு உருளைக் கிழங்கு கொண்டு செல்ல மம்தா அதிரடி தடை
கொல்கத்தா: உருளைக்கிழங்கு விலை உயர்வைத் தடுக்க, மேற்கு வங்கத்தில் இருந்து வேறு மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு அதன் ஏற்றுமதியை உடனடியாகத் தடுத்து நிறுத்துமாறு அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக உருளைக்கிழங்கின் விலை அதிவேகத்தில் உயர்ந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கிலோவுக்கு ரூ. 20-க்கு விற்ற உருளைக்கிழங்கு தற்போது ரூ. 40ஆக விலை உயர்ந்துள்ளது.
உருளைக் கிழங்கு பெருமளவில் விளையும் மேற்கு வங்கத்திலும் இதன் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. விலை உயர்வை கட்டுப்படுத்த அம்மாநில மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

ஏற்றுமதிக்குத் தடை
உருளைக் கிழங்கை வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதை உடனடியாகத் தடுத்து நிறுத்தும்படி அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

விலை குறையட்டும்
உருளைக் கிழங்கின் விலை சராசரி நிலைக்கு வந்த பிறகே, அவற்றின் ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

உருளைக்கிழங்கு லாரிகள்
இதையடுத்து அண்டை மாநிலமான ஒடிஷாவுக்கு சென்ற 250 உருளைக்கிழங்கு லாரிகளை மேற்கு வங்க மாநில போலீஸார் எல்லைச் சாவடியில் புதன்கிழமை தடுத்து நிறுத்தினர்.

ஒடிஷாவில் தட்டுப்பாடு
இந்நிலையில் ஒடிஷாவின் உள்ளூர் சந்தைகளில் உருளைக்கிழங்கு வரத்து குறைந்ததால் தேவை அதிகரித்து விலை வேகமாக உயர்ந்து வருகிறது. ஒடிஷாவில், கிலோவுக்கு ரூ. 40 வீதம் உருளைக்கிழங்கு விற்கப்படுகிறது.

ஒடிஷா அரசு நடவடிக்கை
இதையடுத்து, தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையத்தின் (நாஃபெட்) உதவியை ஒடிஷா அரசு நாடியுள்ளது.
"3 லட்சம் கிலோ உருளைக்கிழங்கை கான்பூர் உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்து ஒடிஷாவுக்கு விநியோகிக்குமாறு நாஃபெட் நிறுவனத்தை கேட்டுக்கொண்டுள்ளதாக'' அம்மாநில உணவு வழங்கல் துறை அமைச்சர் சஞ்சய்தாஸ் வர்மா கூறியுள்ளார்.
-
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications