For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”இனி மணிப்புரி மொழியிலும் சங்கத்தமிழ் திருக்குறள்” ரேபிகா தேவியின் மொழிபெயர்ப்பு

Google Oneindia Tamil News

மணிப்பூர்: மணிப்புரி மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் வெளியீட்டு விழா, மணிப்பூர் மாநில தலைநகரமான இம்பாலில் நடைபெற்றது.

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க இந்திய அரசு இன்று வரை ஒப்புதல் வழங்கவில்லை .

அதனால் இன்று வரை திருக்குறள் இந்திய பாடத் திட்டங்களில் சேர்க்கப்படவில்லை.ஆனால்,மணிப்பூரில் இதற்காக விழாவே எடுத்திருக்கிறார்கள்.

சங்கத்தமிழ் பொக்கிஷம்:

சங்கத்தமிழ் பொக்கிஷம்:

தமிழர்களின் பொக்கிஷமான திருக்குறளை தமிழர்களே தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க தயங்கும் இக்காலத்தில் திருக்குறளின் பெருமையை உணர்ந்து ஒரு மணிப்பூர் மங்கை அதனை தனது தாய் மொழியில் மொழி பெயர்த்திருப்பது தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது.

இணையற்ற காப்பியங்கள்:

இணையற்ற காப்பியங்கள்:

தமிழ்நாட்டு பிள்ளைகள் வடநாட்டு நூல்களை படிக்கும் நிலையில் தமிழகத்தின் ஒப்பற்ற திருக்குறள் , தொல்காப்பியம் போன்ற நூல்களை வடநாட்டிற்கு நாம் கொண்டு சென்று சேர்க்க முடியவில்லை.

மதிப்பறிந்த மணிப்பூர் பெண்மணி:

மதிப்பறிந்த மணிப்பூர் பெண்மணி:

ஆனால், மணிப்பூரை சேர்ந்த சொய்பம் ரேபிகா தேவி பெண்மணி திருக்குறளை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இந்நூல் வெளியீட்டு விழா இம்பாலில் நடைபெற்றது. நூலை மணிப்பூர் மாநில கவர்னர் வீ.கே. துக்கள் வெளியிட்டார்.

வெளியீட்டு விழா:

வெளியீட்டு விழா:

நிகழ்ச்சியில் கவர்னரின் செயலாளர் டாக்டர். ஆர்.கே.நிமாய் சிங், முதலமைச்சரின் செயலாளர் என்.அசோக் குமார், சி.ஐ.சீ.டி இயக்குனர் வீ.ஜி.பூமா, சுரச்சந்பூர் துணை கமிசனர் ஜெசிந்தா லாசரஸ் , உக்ருல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வன் நாகரத்தினம் , சொய்பம் ரேபிகா தேவி, மோரே தமிழ்ச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேசங்கள் கடந்த திருக்குறள்:

தேசங்கள் கடந்த திருக்குறள்:

ரேபிகா தேவி போன்றவர்களின் உதவியால் இப்போது "தேசங்கள்" கடந்து திருக்குறள் சென்றுள்ளது நமக்கு மகிழ்ச்சியை தருகிறது. தமிழகத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் ரேபிகா தேவி போன்ற தமிழ் ஆர்வலர்களை பாராட்டத் தயங்கக் கூடாது .

தமிழக அரசு வாழ்த்து கூறுமா?

தமிழக அரசு வாழ்த்து கூறுமா?

அவருக்கு தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தமிழக அரசும் வாழ்த்துகளை தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்ச் சங்கமும் ,மணிப்பூர் வாழ் தமிழர்களும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

English summary
“Thirukural” which is a leading and antiquated book of Tamil language had been translated to Manipur language by a Lady “Rebika devi”.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X