தனியார் மருந்து நிறுவனங்களிடம் டாக்டர்கள் வாங்கிய பணம், அபார்ட்மெண்ட், கார்கள் 'லஞ்சம்'
மும்பை: தனியார் மருந்து நிறுவனங்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம், அபார்ட்மெண்ட், சொகுசு கார் உள்ளிட்டவைகளை லஞ்சமாக பெற்றதாக 300 டாக்டர்கள் மீது எழுந்த புகார் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் விசாரணையில் இறங்கியுள்ளது. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று 300 டாக்டர்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டு உள்ளது.
சிபாரிசு செய்ய லஞ்சம்
மத்திய மருந்து மற்றும் உர அமைச்சக்கத்திற்கு கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு புகார் வந்தது. அதில் அகமதாபாத்தை மையமாக வைத்து இயங்கி வரும் மருந்து நிறுவனம் ஒன்றிலிருந்து லட்சக்கணக்கில் பணம், அபார்ட்மெண்ட், சொகுசு கார், குடும்பத்தினர் வெளிநாடு சுற்றுலா உள்ளிட்டவற்றை பெற்றதாக நாடு முழுவதும் உள்ள 300 டாக்டர்கள் மீது பெயர் விபரங்களுடன் புகார் தெரிவிக்கப்பட்டது.
விலை கூடிய மருந்துகள்
மேலும் அந்த புகாரில் அந்த நிறுவனம் விதிமுறைகளை மீறி மருந்துகளை தயாரித்து விற்பனை செய்ததில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.400 கோடி வரை லாபம் ஈட்டியுள்ளது. மேலும் இவற்றின் மருந்து விலைகளும் மற்ற பிராண்டுகளை விட 15 முதல் 30 சதவீதம் வரை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த நிறுவனத்தின் மருந்துகளை விற்பனை செய்வதற்காக டாக்டர்களுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாக அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.
இந்த புகார் மனு மருந்து மற்றும் உர அமைச்சகத்தில் இருந்து சுகாதாரத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுகாதாரத்துறை இந்த புகார் குறித்து விசாரணை நடத்த இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டது.
300 பேருக்கு சம்மன்
இதையடுத்து இந்திய மருத்துவ கவுன்சில் புகாரில் சிக்கிய மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 7 டாக்டர்கள் உள்பட 300 பேரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது.
மேலும் இதுகுறித்து விசாரணை குழு டாக்டர் கே.கே.அகர்வால் கூறுகையில், 300 டாக்டர்கள் மீது புகார் எழுப்பப்பட்டுள்ளது. சுமார் 135 டாக்டர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு கவுன்சில் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
109 பேர் நேரில் ஆஜர்
109 டாக்டர்கள் நேரில் ஆஜராகினர். அவர்களிடம் கவுன்சில் விசாரணை நடத்தியது. மீதமுள்ளவர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கவுன்சில் விதிமுறைகளின் படி 3 முறை வாய்ப்பு அளிக்கப்படும். அதற்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த விசாரணையின் போது டாக்டர்களின் கடந்த 3 ஆண்டு கால வங்கி கணக்கு, பாஸ்போர்ட் விவரங்கள், வருமான வரி கணக்கு விவரங்கள் உள்ளிட்டவை சோதனை செய்யப்பட்டன என்றார்.
மராட்டியத்தில் 7 டாக்டர்கள்
மராட்டியத்தில் 7 மூத்த டாக்டர்கள் இந்த புகாரில் சிக்கி உள்ளனர். இதில் 3 டாக்டர்கள் மும்பையை சேர்ந்தவர்கள். இந்த புகார் குறித்த விசாரணை தேசிய அளவிலான ஒரு இடத்தில் வைத்து நடைபெற்று வருகிறது.
இது குறித்து மராட்டிய மாநில மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் கிஷோர் டோரி கூறுகையில், ‘‘குறிப்பிட்ட மருந்தை சிபாரிசு செய்வதற்காக டாக்டர்கள் பரிசு அல்லது பணம் பெறுவது மருத்துவ சட்டப்படி குற்றம் என்றார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications