Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உ.பி.யில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து.. மீட்பு பணிகள் தீவிரம்

மீரட்டில் இருந்து உ.பி. தலைநகர் லக்னோ நோக்கிச் சென்ற ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்திற்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்பட்டதா என தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Subscribe to Oneindia Tamil

லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரில் விரைவு ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகி உள்ளன.

மீரட்டில் இருந்து உ.பி. தலைநகர் லக்னோ நோக்கிச் சென்ற ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்திற்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்பட்டதா என தகவல் ஏதும் வெளியாகவில்லை.

Meerut-Lucknow Rajya Rani Express derails in UP

ரயில் விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. முதலில் 10 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. வடக்கு ரயில்வே செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், விபத்தில் 2 பேருக்கு காயமேற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் உதவித்தொகையாக அறிவித்துள்ளார் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.

0121-6401215 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு ரயில் விபத்து தொடர்பாக உதவி கோர முடியும். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+