வீரப்பன் கூட்டாளிகள் உட்பட 18 பேரின் 'தூக்கு ரத்து' தீர்ப்புகளை எதிர்த்து மத்திய அரசு முறையீடு!
டெல்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சதாசிவம் பதவி வகித்த காலத்தில் 18 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைகளை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றி அளித்த தீர்ப்புகளை எதிர்த்து அரசியல் சாசன பெஞ்ச் முன்பு முறையீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து ஆயுள் தண்டனையாக்கியது. மூவரது கருணை மனுவை ஜனாதிபதி 11 ஆண்டுகாலம் கழித்து நிராகரித்ததால் இவர்களது தூக்கு ஆயுள் தண்டனையாக்கப்பட்டது என்பது தீர்ப்பு.

இதைத் தொடர்ந்து ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இம்மூவர் மற்றும் நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இம்முறையீட்டு மனுவை அரசியல் சாசன பெஞ்ச்சுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தலைமை நீதிபதி சதாசிவம் பதவி காலத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 4 பேர், டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட புல்லர் உள்ளிட்ட பலரது தூக்கு தண்டனையானது கருணை மனுக்களை ஜனாதிபதி தாமதமாக நிராகரித்தார் என்ற காரணத்தைக் காட்டியே ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
தற்போது இந்த தூக்கு தண்டனைகளை ரத்து செய்து அளித்த தீர்ப்புகளை எதிர்த்து அரசியல் சாசன பெஞ்ச் முன்பு மேல்முறையீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது அரசியல் சாசனப்படி கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரிக்க காலக்கெடு எதுவும் விதிக்க முடியாது என்பது மத்திய அரசின் வாதம். இதை அரசியல் சாசன பெஞ்ச் முன்பு எடுத்து வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications