முஸ்லிம்களுக்கு 4.5% இடஒதுக்கீடு- தலித் சிறுபான்மையினருக்கு "எஸ்.சி" அந்தஸ்து: காங். வாக்குறுதி
டெல்லி: லோக்சபா தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் சிறுபான்மையினர் வாக்குகளை ஒட்டுமொத்தமாக தக்க வைத்துக் கொள்ள அடுத்த அஸ்திரத்தை காங்கிரஸ் ஏவிக் கொண்டிருக்கிறது.
லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஏற்கெனவே வெளியிடப்பட்டு விட்டது. இந்த நிலையில் துணை தேர்தல் அறிக்கை ஒன்றை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

அதில் சிறுபான்மையினர் மேம்பாடு என்ற பகுதியில், தற்போது இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் முஸ்லிம்களுக்கு 4.5% இடஒதுக்கீடு வழங்க வகை செய்வோம் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மன்மோகன்சிங் அரசால் இந்த 4.5% இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருந்த போதும் நீதிமன்றங்களால் அது முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தலித் சிறுபான்மையினர் அனைவரையுமே "தாழ்த்தப்பட்டோர்" பட்டியலில் சேர்ப்போம் என்ற புதிய உறுதிமொழியையும் காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. தற்போது ஹிந்துக்கள் மற்றும் புத்தமதத்தினருக்குத்தான் தாழ்த்தப்பட்டோர் சலுகை உண்டு.
இனி முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்களும் இந்த சலுகையை அனுபவிக்க வழிவகை செய்வோம் என்கிறது காங்கிரஸ். ஆனால் மதங்களின் அடிப்படையில் இப்படி தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அதேபோல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தையும் உரிய முறையில் நிரப்புவதற்கு காங்கிரஸ் கட்சி உறுதி அளித்திருக்கிறது. மேலும் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மதமோதல் தடுப்பு மசோதாவை முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றுவோம் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications