ஹைதராபாத் ஏவுகணை வளாகத்துக்கு இன்று அப்துல்கலாம் பெயர் சூட்டப்படுகிறது
ஹைதராபாத்: மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்க்கையில் மிக முக்கிய இடம்பிடித்த ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ) ஹைதராபாத் ஏவுகணை வளாகம் இன்று முதல் அவரது பெயரையே தாங்கி நிற்க தயாராகி நிற்கிறது...
1970களில் டி.ஆர்.டி.ஓ சுமார் 2,000 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஏவுகணைகளை சோதித்துப் பார்ப்பதற்காக கையகப்படுத்தி இருந்தது. இந்த சோதனை முடிவடைந்த பின்னர் பல ஆண்டுகாலம் எந்த ஒரு பயன்பாடும் இல்லாமல் இந்த நிலம் இருந்து வந்தது.

ஒருகட்டத்தில் ஆந்திர பிரதேச அரசு இந்நிலத்தை மாநில அரசிடம் மீண்டும் ஒப்படைத்துவிட வேண்டும் என்று வலியுறுத்தியது. அப்போது அப்துல் கலாம்தான் இதில் தலையிட்டு மாநில அரசு அதிகாரிகளை சந்தித்து, நாட்டின் மிக முக்கியமான ஏவுகணை ஆராய்ச்சிக்கு இந்த இடத்தை பயன்படுத்தலாம் என ஆலோசனை கூறினார். இதன் விளைவாக எழுந்ததுதான் டி.ஆர்.டி.ஓ.வின் ஹைதராபாத் ஏவுகணை வளாகம்..
இன்று நாட்டின் ஜனாதிபதியாக, டி.ஆர்.டி.ஓவின் தலைவராக இருந்த அப்துல்கலாமின் 84வது பிறந்த நாள்.. இந்த கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை ஹைதராபாத் ஏவுகணை வளாகம் செய்து கொண்டிருப்பதை நாம் நேரிலேயே கண்டோம்..
இன்று முதல் டி.ஆர்.டி.ஓ.வின் ஹைதராபத் ஏவுகணை வளாகம் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பெயரை தாங்கி நிற்க காத்திருக்கிறது. இந்த வளாகத்தில் பணிபுரியும் இளம் விஞ்ஞானிகளிடையே நாம் பேசியபோது, அப்துல்கலாமுடன் இணைந்து பணியாற்றிய விஞ்ஞானிகளுடன் நாங்களும் பணிபுரிகிறோம் என்பது பிரமிப்பாக இருக்கிறது.. நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் என நெகிழ்கின்றனர்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிவியல் ஆலோசகராக உள்ள சதீஷ் ரெட்டி கூறுகையில், டி.ஆர்.டி.ஓ.வுக்கும் இந்தியாவுக்கும் அப்துல்கலாம் ஆற்றிய பணிகளுக்கு ஈடாக நாம் எதையுமே செய்துவிட முடியாது. எங்கள் ஒவ்வொருவரையும் நம்பிக்கை கொள்ள வைத்து கடினமான ஆராய்ச்சிகளை எளிமையாக முடிக்கச் செய்தவர் கலாம் என்கிறார்.

இந்த வளாகத்தில் உள்ள இமாரத் ஆராய்ச்சி வளாகம் என்பது கலாமின் கைகளில் குழந்தையைப் போல தவழ்ந்த ஒன்று.. 1988ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ந் தேதி இது உருவாக்கப்பட்டது. அப்துல்கலாம் தலைமையில் இந்திய ஏவுகணை திட்டங்களில் இந்த இமாரத் ஆராய்ச்சி வளாகம் முக்கியப் பங்கு வகித்தது. அப்துல்கலாமைப் பொறுத்தவரையில் ஹைதராபாத்தில் உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி மையம் அமைய வேண்டும் என விரும்பினார்..அதன் விளைவாக எழுந்ததுதான் இமாரத் ஆராய்ச்சி மையம்.
இமாரத் ஆராய்ச்சி வளாகம் குறித்து தமது அக்னி சிறகுகள் நூலிலும் கலாம் நிறையவே பதிவு செய்துள்ளார். தற்போது ஹைதராபாத் ஏவுகணை வளாகமானது கலாம் பெயரை தாங்கி நிற்கப் போகிறது என்பது குறித்து கலாமின் பேரன் சேக் சலீமிடம் நாம் பேசிய போது, கலாமின் இதயத்தில் நெருங்கிய இடம்பிடித்திருந்தது இமாரத் ஆராய்ச்சி நிறுவனம். நிச்சயமாக இளம் விஞ்ஞானிகளுக்கு இந்தப் பெயர் சூட்டுதல் உந்துசக்தியாக இருக்கும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications