பட்ஜெட் தாக்கலின்போது இரண்டே இரண்டு முறை மட்டும் கைதட்டிய மோடி
டெல்லி: மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் தாக்கல் செய்தபோது பிரதமர் நரேந்திர மோடி இரண்டே இரண்டு முறை மட்டும் தான் கைதட்டி பாராட்டினார்.
2014-2015ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது தான் மோடி அரசு தாக்கல் செய்த முதல் மத்திய பட்ஜெட் ஆகும்.
ஜேட்லி பட்ஜெட் தாக்கல் செய்தபோது அவையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றி பார்ப்போம்.

மோடி
ஜேட்லி பட்ஜெட் தாக்கல் செய்தபோது பிரதமர் நரேந்திர மோடி மிகவும் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். ரயில்வே பட்ஜெட் தாக்கலின்போதும் அவர் அப்படி தான் இருந்தார்.

பாராட்டு
ஜேட்லியின் பல்வேறு அறிவிப்புகளுக்கு அவை உறுப்பினர்கள் மேஜையை தட்டியும், கை தட்டியும் தங்கள் பாராட்டை தெரிவித்தனர்.

கைதட்டல்
அவை உறுப்பினர்கள் எல்லாம் பலமுறை கைதட்ட மோடியோ வெறும் இரண்டு முறை தான் கை தட்டினார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

வாரணாசி
வாரணாசி உள்ளிட்ட பழமை வாய்ந்த நகரங்களை பாதுகாக்கும் திட்டங்கள் குறித்து அறிவித்தபோது கூட மோடி கைதட்டவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் மோடி வாரணாசியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்பொழுது?
தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டதாக அறிவித்தபோதும், இன்சூரன்ஸ் மற்றும் பாதுகாப்பு துறையில் அன்னிய நேரடி முதலீடு அதிகரிக்கப்படுவது குறித்து அறிவித்தபோதும் தான் மோடி கை தட்டினார்.

இடைவேளை
ஜேட்லி 5 நிமிட இடைவேளை கேட்டபோது பலரும் தங்களின் இருக்கைகளில் இருந்து எழுந்து நடந்தனர். ஆனால் மோடி அசையாமல் அமர்ந்திருந்தார்.
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்.. நீங்க கணக்கு வச்சு இருக்கீங்களா?.. ஒரு இன்ச் கூட நகராது.. ஷாக் தகவல் -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications