இந்துத்துவா கும்பல் அட்டூழியம்- முஸ்லிம் முதியவரை ஜெய்ராம் சொல்ல வலியுறுத்தி 25 முறை அறைந்த கொடூரம்
ஜெய்ப்பூரில் முஸ்லீம் முதியவர் ஒருவர் இளைஞர் ஒருவரால் மோசமாகத் தாக்கப்பட்டு இருக்கிறார்.
Recommended Video

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அடிக்கடி முஸ்லீம் மக்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். அங்கு அதிக அளவில் முஸ்லீம்கள் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று முஸ்லீம் முதியவர் ஒருவர் இளைஞர் ஒருவரால் மோசமாகத் தாக்கப்பட்டு இருக்கிறார். 25 முறை அவர் கன்னத்தில் அறையப்பட்டுள்ளார்.
இது வீடியோவாக தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோ மிகவும் வைரல் ஆகியுள்ளது.

வைரல்
இந்த வீடியோ வினய் மீனா என்ற 18 வயது நபரால் பேஸ்புக்கில் ஏற்றப்பட்டு உள்ளது. அவர்தான் அந்த முஸ்லீம் முதியவரை 25 முறை கன்னத்தில் அறைந்துள்ளார். ஒவ்வொரு முறையும் ஜெய் ஸ்ரீ ராம் சொல்லும் படி கூறியுள்ளார்.

போராட்டம் நடந்தது
இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து பெரும் பிரச்சனை ஆனது. இந்தச் சம்பவம் நடந்த சிரோஷி நகரில் போராட்டம் வெடித்தது. முஸ்லீம் குழு போலீசிடம் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியது.

போலீஸ் நடவடிக்கை
இந்த நிலையில் போலீஸ் வினயை கைது செய்துள்ளனர். அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் யாரும் பரப்பி பிரச்சனை செய்ய கூடாது என்று கூறப்பட்டு இருக்கிறது. இதனால் தற்போது அங்கு மக்களின் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

முடக்கம்
தற்போது பேஸ்புக்கும் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. வினயின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டு உள்ளது. அதேபோல் அந்த வீடியோ பேஸ்புக்கில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications