பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க சுபாஷ் சந்திரபோஸ் குடும்பம் முடிவு
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடியை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் குடும்பத்தினர் சந்திக்க முடிவு செய்துள்ளனர்.
சுதந்திர போராட்ட தலைவர்களில் முக்கியமானவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்து சர்ச்சை நிலவுகிறது. எனவே, அவரை பற்றிய ரகசிய கோப்புகளை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று அவரது உறவினர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேதாஜி பற்றிய சில ரகசிய கோப்புகளை வெளியிடப்போவதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து பேச நேதாஜியின் கொள்ளு பேரன் சந்திரகுமார் போஸ் மற்றும் குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதில் நேதாஜியின் மகள் அனிதாவும் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications