For Daily Alerts
Just In
திட்டக் கமிஷனின் பெயர் இனி 'நிதி ஆயோக்' - மாற்றியது மத்திய அரசு!!
டெல்லி: திட்டக் கமிஷனின் பெயரை 'நிதி ஆயோக்' என்று மத்திய அரசு மாற்றியுள்ளது.
நாட்டின் முதலாவது பிரதமர் ஜவஹர்லால் நேரு கொண்டுவந்ததுதான் திட்டக் கமிஷன் என்ற அமைப்பு. இதன் மூலம் ஐந்தாண்டு காலத் திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.
ஆனால் மத்தியில் மோடி தலைமையிலான அரசு அமைந்த உடன் திட்டக் கமிஷன் அமைப்பை கைவிட்டுவிட்டு அதற்கு மாற்றாக புதிய முறை உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக பல்வேறு கட்ட ஆலோசனைகளை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. மாநில முதல்வர்களுடனும் மோடி ஆலோசனை நடத்தினார்.
இதன் முதல் கட்டமாக திட்டக் கமிஷனின் பெயரை 'நிதி ஆயோக் என்று மத்திய அரசு மாற்றியுள்ளது.
Comments
English summary
India's Planning Commission will be renamed "Niti Ayog" as part of a plan to restructure the institution that the government believes has run its course.