நம்பிக்கை இழக்கிறார்களா மக்கள் பிரதிநிதிகள்.. 5 வருடங்களில் 'நோட்டா' வாங்கிய ஓட்டுகளை பாருங்கள்
எந்த தேர்தல் பிரச்சாரமும் செய்யாமலே கடந்த 5 ஆண்டுகளில் நோட்டா கோடிக்கணக்கான மக்களின் மனம் கவர்ந்துள்ளது.
டெல்லி: எந்தத் தேர்தல் பிரச்சாரமும் செய்யாமலே வாக்குப்பெட்டியில் அறிமுகம் செய்யப்பட்ட நோட்டா 5 ஆண்டுகளில் 1.33 கோடி மக்களின் மனம் கவர்ந்து வாக்குகளைப் பெற்றுள்ளது.
யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்று வாக்காளர் தெரிவிக்கும் விதமாக வாக்குப் பெட்டிகளில் நோட்டா கடந்த 2013ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த அம்சத்தை தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டியில் சேர்த்தது. சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், டெல்லி மற்றும் மத்திய பிரதேச மாநில தேர்தலின் போது இது முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் ஒட்டுமொத்தமாக நோட்டாவுக்கு மட்டும் 1,33,09,577 அதாவது சுமார் 1.33 கோடி வாக்குகள் கிடைத்திருக்கின்றன. டெல்லியில் இருந்து செயல்பட்டு வரும் ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நோட்டாவுக்கு அதிக வாக்குகள்
சட்டசபைத் தேர்தல்களில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் சராசரியாக 2.70 லட்சம் வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்துள்ளது. 2014 மக்களவைத் தேர்தலில் முதல்முறையாக நோட்டா அறிமுகம் செய்யப்பட்ட போதும் 60,02,942 வாக்குகள் அதாவழ 1.08 சதவீத வாக்குகளை நோட்டா பெற்றது.

லட்சத்தீவில் குறைவு
இதில் குறிப்பிடும்படியான விஷயம் என்னவென்றால் நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் தான் அதிக வாக்குகளாக 46,559 வாக்குகள் நோட்டாவிற்கு கிடைத்துள்ளது. குறைந்தபட்சமான லட்சத்தீவில் 123 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்திருந்தது.

வாக்குகளை அள்ளிய நோட்டா
2017ல் கோவாவின் பானாஜி மற்றும் வால்போய் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் நோட்டா மூன்றாவது இடத்தை பெற்றது. இரண்டு தொகுதியிலும் 1.94% மற்றும் 1.99% என்ற ரீதியில் நோட்டா வாக்குகள் பதிவாகியிருந்தன.

மக்களின் எதிர்ப்பு நிலைப்பாடு
மற்ற மாநில சட்டசபை தேர்தல்களிலும் நோட்டா அதிக அளவிலான வாக்குகளை பெற்றள்ளது. 2015ல் பீஹாரின் 2 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் சுமார் 2.08% வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது. இதே போன்று டெல்லியிலும் 35,897 வாக்குகளை நோட்டா பெற்றதாக ஏடிஆர் கூறுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications