ரஷ்யா பற்றிய பேச்சை ஒபாமா தவிர்த்திருந்திருக்கலாம்
டெல்லி: அமெரிக்க அதிபர் ஒபாமா டெல்லியில் ரஷ்யா, உக்ரைன் விவகாரம் பற்றி பேசியது இந்தியாவை வியப்படைய வைத்துள்ளது. அது அமெரிக்க பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு ஒபாமா அளித்த பதில் என்பதால் அதை பலரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இந்தியா, அமெரிக்கா உறவு பற்றி பேச வந்த இடத்தில் ஒபாமா ரஷ்யா, உக்ரைன் பிரச்சனை பற்றி பேசாமல் இருந்திருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.

ஒபாமா என்ன கூறினார்?
ரஷ்யா வலுவிழந்துவிட்டது என்றோ, அதன் பொருளாதாரம் சிதைந்துவிட்டது என்றோ நாங்கள் நினைக்கவில்லை என்பதை தான் நான் பலமுறை கூறி வருகிறேன். பெரிய நாடுகள் சிறிய நாடுகளிடம் வம்பு இழுக்கக் கூடாது என்ற கொள்கையை எடுத்துரைப்பதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். அடுத்த நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையில் பிற நாடுகள் தலையிடக் கூடாது. அது தான் தற்போது உக்ரைனில் பிரச்சனையாக உள்ளது.
இந்த விவகாரத்தில் ரஷ்யாவுடன் ராணுவ பிரச்சனையில் ஈடுபட விரும்பவில்லை. அதே சமயம் உக்ரைன் தனது எல்லையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க தொடர்ந்து உதவி செய்வோம். உக்ரைனில் உள்ள போராளிகளுக்கு ரஷ்யா ஆதரவு அளிப்பதுடன் ஆயுதங்கள், நிதி மற்றும் பயிற்சியும் அளிக்கிறது.
தவிர்த்திருந்திருக்கலாம்
இருநாட்டு உறவு பற்றி பேச வந்த இடத்தில் வேறு நாட்டு பிரச்சனை பற்றி பேசியதை ஒபாமா தவிர்த்திருந்திருக்கலாம் என்று ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் சி.டி. சஹாய் ஒன்இந்தியாவிடம் தெரிவித்தார். அமெரிக்க பத்திரிக்கையாளர் கேள்வி கேட்டதால் தான் ஒபாமா அது பற்றி பேசினார் என்று இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் தெரிவித்தார்.
அந்த பத்திரிக்கையாளரிடம் இங்கு இது குறித்து பேச வேண்டாம் என்று ஒபாமா தெரிவித்திருந்திருக்கலாம். உக்ரைன் பிரச்சனை ஒன்றும் புதிதும் அல்ல, அண்மையில் ஏற்பட்டதும் அல்ல. மாதக் கணக்கில் அந்த பிரச்சனை உள்ளது.
போர் அல்லது போர் போன்ற நிலையை ரஷ்யாவில் தவிர்க்கலாம் என்று ஒபாமா கூறியது ஆறுதலான விஷயம் என்றார் சஹாய்.
இந்தியா
இரு நாட்டு தலைவர்களிடையே நடந்த பேச்சுவார்த்தையில் உள்ள நல்ல விஷயங்களை இந்த ரஷ்ய பிரச்சனை மறைத்துவிடக் கூடாது என்பதே இந்தியாவின் கவலை. வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங் கூறுகையில், அமெரிக்க பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தான் ஒபாமா பதில் அளித்தார் என்றார்.
பாகிஸ்தான்
தீவிரவாதத்தை எதிர்ப்பதில் இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரம் காட்டுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சஹாய் தெரிவித்தார். பாகிஸ்தான் விவகாரத்தில் இனி இந்தியா அமெரிக்காவை பற்றி புகார் கூற முடியாது.
பாகிஸ்தான் இனியாவது தீவிரவாதத்திற்கு எதிராக போராட வேண்டும். இது தான் இந்தியா-அமெரிக்கா இடையே நடந்த பேச்சுவார்த்தையின் மூலம் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட தகவல் என்று தான் நினைப்பதாக சஹாய் மேலும் தெரிவித்தார்.
-
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications