பாக். புதிய ஏவுகணை பரிசோதனை... இந்தியாவுக்கு டென்ஷன் கொடுக்குறாங்களாமாம்!
பாகிஸ்தான் புதிய ஏவுகணை பரிசோதனை செய்துள்ளதால் இந்தியாவின் இருபக்க எல்லையிலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
டெல்லி: இந்திய எல்லையில் சீனா கடும் நெருக்கடி கொடுத்துவரும் நிலையில், பாகிஸ்தான் புதியதாக சக்தி வாய்ந்த ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதால், இந்தியாவின் இருபக்க எல்லையிலும் பதற்றம் கூடியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே தற்போது சுமூகமான நிலை இல்லை. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை தாண்டி தாக்குதலில் ஈடுபடுவதாக இரு நாடுகளும் பரஸ்பர குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கூறி வருகிறது.

மேலும், காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் தீவிரமாகக் கையில் எடுத்துக் கொண்டுள்ள பாகிஸ்தான், சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் பேசி வருகிறது. இது இந்தியாவைக் கொந்தளிக்க வைத்துள்ளது.
இந்நிலையில், தரையிலிருந்து குறைந்த தூரம் சென்று இலக்கை தாக்கும் 'நாஸ்ர்' என்ற ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவம் பரிசோதனை செய்துள்ளது. நேற்று நடத்தப்பட்ட இந்த பரிசோதனை வெற்றிகரமாக நிறைவேறியதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறைந்த தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் குறிப்பாக இந்தியாவை குறிவைத்தே அங்கு தயாரிக்கப்படுகிறது. இந்த சோதனைக்கு பின்னர் பேசிய அந்நாட்டு ராணுவ தலைமை தளபதி ஆலம் பஜ்வா, "எங்கள் இலக்கு ராணுவ பலம் மிக்க அண்டை நாடுகளுடன் அமைதியை கடைப்பிடிப்பது தான். போர் வேண்டாம் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு" என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ள விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபர், பிரதமர் ஆகியோர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications