எல்லைக் கோட்டில் பாகிஸ்தான் அத்துமீறல்... இந்தியா பதிலடி #locattacck
ஜம்மு: காஷ்மீர் பகுதியில் உள்ள இந்திய எல்லைகள் மீது குறித்து வைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதனால் அங்கு இந்திய ராணுவத்திற்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.
பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள பூஞ்ச் செக்டாரில் இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இந்தப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்து வரும் நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது.

மோட்டார் ஆயுதங்கள், தானியங்கி ஆயுதங்கள் மற்றும் சிறியரக துப்பாக்கிகளை கொண்டு பாகிஸ்தான் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் அதனை இந்திய ராணுவம் எதிர்த்து சண்டையிட்டு வருவதாகவும் பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2ம் தேதி ஜம்மு மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் உள்ள அக்னூர் செக்டாரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்டு மாதம் பூஞ்ச் செக்டாரில் இரண்டு வெவ்வேறு இடங்களில் அத்துமீறி பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
பாகிஸ்தான் கடந்த ஓராண்டில் மட்டும் 405 முறை அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 71 படுகாயம் அடைந்துள்ளனர். போர் நிறுத்த அத்துமீறல் சம்பவம் 253 சர்வதேச எல்லையிலும் 152 எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியிலும் நடந்துள்ளன. பாகிஸ்தானின் இந்த அத்துமீறல் செயல்பாட்டால் கிராம மக்கள் சுமார் 8 ஆயிரம் பேர் சொந்த வீட்டை விட்டு பாதுகாப்பான இடங்களில் சென்று குடியேறியுள்ளனர்.
-
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு!












Click it and Unblock the Notifications