நீதித்துறை செயல்பாடுகளில் நாடாளுமன்றம் தலையிட கூடாது: தலைமை நீதிபதி லோதா பரபரப்பு பேச்சு!
டெல்லி: நீதிமன்ற செயல்பாடுகளில் நாடாளுமன்றம் தலையிட கூடாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்,லோதா தெரிவித்தார். நீதிபதிகளை நியமிக்கும் நடைமுறையை மத்திய அரசு
மாற்றியுள்ள நிலையில் லோதா இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுதந்திர தினத்தை, முன்னிட்டு டெல்லியில் இன்று உச்சநீதிமன்ற வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து லோதா பேசியதாவது:
நீதித்துறை, அரசு துறை, நாடாளுமன்றங்களில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் மரியாதை அளித்துக்கொள்ளும் வகையில் முதிர்ச்சி அடைந்தவர்கள் என்று நான் நம்புகிறேன்.
இவர்கள் தங்களுக்குள் எந்த இடையூறும் இல்லாமல் பணியாற்ற அனுமதிப்பார்கள் என்று நம்புகிறேன். அரசியல் சாசனத்திலும் இது நன்கு வரையறுக்கப்பட்டுள்ளது" என்றார்.
உச்சநீதிமன்ற மற்றும் ஹோகோர்ட் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறையை மாற்றிவிட்டு நீதிபதிகளை நியமிக்க ஆணையம் அமைக்கும் வகையிலான சட்டத்தை லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
ஏற்கனவே உள்ள கொலிஜியம் முறையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அதிக அதிகாரம் இருந்தது. எனவே அந்த முறையே தொடர வேண்டும் என்று லோதா தெரிவித்திருந்தார். கொலிஜியம் முறையை ஒழிக்க வேண்டும் என்று கேட்டு தொடரப்பட்ட பொது நல மனுவையும் லோதா தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் கடந்த வாரம் தள்ளுபடி செய்திருந்தது.
இந்நிலையில் மத்திய அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளதால் லோதா அதிருப்தியடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது இன்றைய கருத்தும் இதை மெய்ப்பிப்பதாக உள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications