இங்கிலாந்தில் மூன்று நாள் பயணம்.. லண்டன் சென்றடைந்த மோடிக்கு உற்சாக வரவேற்பு
டெல்லி: பிரதமர் நரேந்திரமோடி 3 நாள் பயணமாக இன்று இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்று சேர்ந்தார். இங்கிலாந்தில் அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று சிறப்பு விமானத்தில் புறப்பட்ட மோடி, இந்திய நேரப்படி மாலையில், லண்டன் சென்றடைந்தார். அங்கு அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்திய நேரப்படி இன்று இரவு, பிரிட்டீஷ் பிரதமர், டேவிட் கேமரூன், மோடிக்கு ராணுவ வரவேற்பு அளிக்கிறார். பிறகு இரு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர். இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்றுகிறார்.
நாளை, லண்டன் பக்கிங்ஹாம் அரண்மனையில் ராணி 2ம் எலிசபெத், பிரதமர் மோடிக்கு மதிய விருந்து அளித்து கவுரவிக்கிறார். பின்னர் வெம்லே மைதானத்தில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் பேசுகிறார். இதில் 60 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேமரூனுடனான சந்திப்பின்போது, பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் பேச்சுவார்த்தையில் இடம்பெறுகிறது. மேலும் வர்த்தகம், முதலீடு, எரிசக்தி துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரு தலைவர்களும் கூட்டாக அறிக்கையும் வெளியிடுவார்கள் என வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடியின் இந்த பயணத்தின் போது, லண்டனில் கடந்த 1921-22ம் ஆண்டுகளில் அம்பேத்கர் வசித்த பகுதியையும் அவர் பார்வையிடுகிறார்.
பீகார் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு முதல் முறையாக மோடி மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணம் இதுவாகும். முந்தைய பயணங்களின்போது முந்தைய காங்கிரஸ் அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்ததால் உள்நாட்டில் மோடி அதிருப்தியை சம்பாதித்தார். எனவே, இம்முறை அவரின் செயல்பாடுகள் அரசியல் விமர்சகர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
-
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications