மக்கள் பிரச்சினைகளுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.. நாடாளுமன்ற மோதல் பற்றி பிரணாப் வேதனை
டெல்லி : நாட்டு மக்கள் பிரச்சினைகள் பற்றி சிந்தித்து அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் 69 வது சுதந்திர தின விழா நாளை (சனிக்கிழமை) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது...

அரசியல் அமைப்பு அளித்த மிகப்பெரிய அமைப்புதான் ஜனநாயகம். கல்வி வேலை மூலம் பெண்களின் நிலையில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம். ஜனநாயக அமைப்புகள் நெருக்கடிக்குள்ளானால் கவனமாக யோசிக்க வேண்டும்.
நாடாளுமன்றம் விவாதம் நடத்துவதற்கான இடமின்றி போராடுவதற்கான இடமாக மாறியுள்ளது. ஜனநாயக அமைப்புகள் நெருக்கடிக்குள்ளானால் கவனமாக யோசித்து தீர்வு காண வேண்டும். பொருளாதார கொள்கைகள் பட்டினியை ஒழிப்பதை இலக்காக கொள்ள வேண்டும்.
மக்கள் சிந்திப்பதற்கான தருணம் வந்துள்ளது. மக்களை பற்றி அனைத்து கட்சிகளும் சிந்தித்து செயல்பட வேண்டும். ஜனநாயக அமைப்புகளுக்கு நெருக்கடி வந்தால், மக்களும் அரசியல் கட்சிகளும் இணைந்து தீர்வு காண வேண்டும். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளின் களமாக அண்டை நாடுகள் இருக்க கூடாது. பயங்கரவாதிகளின் ஊடுருவல் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்.
வங்க தேசத்துடனான் எல்லைப்பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது உற்சாகமூட்டுகிறது. நாட்டின் பன்முகத்தன்மையை கட்டிக்காத்து வளர்க்க வேண்டும்.
இவ்வாறு தனது குடியரசுதின உரையில் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications